ஒரு பெண்ணின் காதலுக்காக இரு இளைஞர்கள் நள்ளிரவில் சண்டை போட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள பர்கத் நாகா என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இரு இளைஞர்கள் நடுரோட்டில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அங்கு ஒரு இளம் பெண்ணும் நின்றுகொண்டிருந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்த இரு […]

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மற்றும் ரூ.150 மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாயும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் […]

உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் மேற்கு இடையூ என்ற வெப்பமண்டல புயல் வடக்கு மாநிலங்களில் பருவமழையைக் கொண்டு வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாநிலங்களான டெல்லி, ஹரியானா, இமாச்சல், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. […]

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐஐடி மும்பையில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு […]

மேற்கு வங்க மாநிலத்தில் 697 வாக்குச்சாவடி மையத்தில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிட்டன. மொத்தம் 73,887 இடங்கள் மற்றும் 5.67 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியதால் தேர்தல் நடைபெறாமல் […]

தேசிய தலைநகரில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து இணைப்பு பணியில் ஈடுபட முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 41 ஆண்டுகளில்‌ இல்லாத அளவாக தலைநகர்‌ டெல்லியில்‌ கனமழை‌ கொட்டி தீர்த்துள்ளது. நகரின்‌ பல பகுதிகளில்‌ ஆங்காங்கே வெள்ளம்‌ தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள்‌ இடிந்து விழுந்ததால்‌, நிவாரண பணிகளில்‌ ஈடுபடுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு விடுமுறையை ரத்து செய்தார்‌ முதலமைச்சர்‌ அரவிந்த்‌ கெஜ்ரிவால்‌. டெல்லியை ஒட்டிய குருகிராமில் பேருந்து நிலையம் […]

ஆதார் – பான் அட்டையுடன் இணைக்காவில்லை என்றால் ஜூலை 30ம் தேதிக்கு மேல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவதற்கான காலக்கெடுவை இழக்க நேரிடும். பான் கார்டுடன் ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடைந்தது என்று இந்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஒருவர் பான் கார்டை ஆதாருடன் இணைக்க தவறினால், ஜூலை 1ஆம் தேதி அன்று முதல் அவரது பான் எண் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று உயர்வது வழக்கம் தான் என்ற போதிலும் இந்த ஆண்டு தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து மக்களை அதிரவைத்து வருகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால், தற்போதோ தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து […]

பஞ்சாப் மாநிலத்தில் கனமழையால் இரண்டு மாடி வீடு ஒன்று இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பீதியை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் சில தினங்கள் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை […]

வட மாநிலங்களில் ஒன்றான இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் லாஹல், ஸ்பிட்டி நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. […]