மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும், வரவிருக்கும் 8-வது மத்திய ஊதியக் குழுவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 2.57 என்ற ‘பொருத்தக் காரணியின்’ (fitment factor) அடிப்படையில், ஊதியங்கள் சுமார் 34 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தால் 2025-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி இந்த ஊதியக் குழு அமைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி வெளியிட்ட விவரங்களின்படி, இந்த ஊதியக் குழுவானது ஊதியக் […]

விமான நிறுவனங்கள் ஏப்ரல் 20 முதல், ஒரு விமானத்தில் உள்ள இருக்கைகளில் குறைந்தது 60 சதவீதத்தை எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.. இந்த நிலையில் இந்த உத்தரவை, நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது. புதிய வழிகாட்டுதல்கள் குறித்து விமான நிறுவனங்கள் தங்கள் கவலைகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது உத்தரவில், இந்திய […]

தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிலவும் நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து, உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, 41 அத்தியாவசிய பெட்ரோ கெமிக்கல் (கச்சா எண்ணெய் சார்ந்த வேதியியல்) பொருட்களின் மீதான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரிச் சலுகை, ஜூன் 30, 2026 […]

ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள தற்போதைய உலகளாவிய சூழலில், இந்தியாவின் அண்டை நாடு ஏதேனும் தவறான சாகசச் செயல்களை மேற்கொண்டால், அதன் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது.. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றங்கள் மேற்கு ஆசியாவில் ஒரு போருக்கு வழிவகுத்துள்ளன. இது உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தைப் பாதித்து, விலையேற்றத்திற்கு இட்டுச்சென்றுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ளன. இந்தச் சூழலில், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. உயர்தர சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகளில் […]

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக இந்தியா எல்பிஜி எரிவாயு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மக்கள் எரிவாயு பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எரிவாயுவை முன்பதிவு செய்த பிறகும், வீடு வந்து சேராமல் போவது மற்றும் தாமதமாக விநியோகம் செய்யப்படுவது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் கள்ளச் சந்தையில் எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஹோட்டல் உரிமையாளர்கள் […]

அமெரிக்க-ஈரான் போர் எப்போது முடிவடையும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை தொடரும் நிலையில், பெட்ரோலிய வேதிப்பொருட்களைச் சார்ந்திருக்கும் தொழில்களுக்கு அரசாங்கம் வியாழக்கிழமை தற்காலிக நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தது. உலகளாவிய விநியோகச் சங்கிலி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், முக்கியமான பெட்ரோலிய வேதிப்பொருட்களின் இறக்குமதிக்கு சுங்க வரியிலிருந்து அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், இறுதிப் பொருட்களின் நுகர்வோருக்கும் இந்த நடவடிக்கை நிவாரணம் அளிக்கும். ஜூன் 30 வரை […]

அமெரிக்கா ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவில் “போர் லாக்டவுன்” அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை போல வடிவமைக்கப்பட்ட அந்த செய்தியில், இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.. இதனால் பல சமூக ஊடக பயனர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில், இப்படிப்பட்ட எந்த லாக்டவுன் அறிவிப்பையும் எந்த மத்திய அரசு வெளியிடவில்லை.. அந்த தகவல் முழுவதும் போலியானது. […]