டெல்லியில் மகனே தாயை ஊசியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம் ரோகிணி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிங்கு. இவருக்கு வயது 38. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் தாய் சத்வந்த் கவுர் (64) உடன் வசித்து வந்தார். இந்நிலையில், திடீரென ஆத்திரமடைந்த ரிங்கு, தனது தாயை பலமுறை ஊசியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தாய், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனைத் […]

பீகாரில் மனைவி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை கண்டுபிடித்த கணவன் எடுத்த முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, அப்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் […]

வரும் 14ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்திய மக்கள் பார்வை எல்லாம் இஸ்ரோ பக்கம் திரும்பியுள்ளது. நிலவில் தன் தடத்தை பதித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் தற்போது இணைய போவதை நினைத்து இந்திய மக்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரலாற்று முக்கியமான நிகழ்வை […]

திருமண உறுதிமொழியின் அடிப்படையில், இருவரும் சம்மதித்து உடல் உறவு கொண்ட பின், சில காரணங்களால் திருமணத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று ஒரிசா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு, அவரது தோழியான ஒரு பெண்ணால் முன்வைக்கப்பட்டுள்ளது. நல்லெண்ணத்தில் கொடுத்த அளித்து […]

பான் – ஆதார் எண் இணைக்காதவர்கள் இனிமேல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பணப்பரிவர்த்தனை வரை அனைத்தும் பாதிக்கப்படும். என்னென்ன இழப்புகள் ஏற்படும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள். பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு 30 ஜூன் 2023 அன்றுடன் முடிவடைந்தது. இதுவரை ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு, அவர்களின் பான் கார்டு ஜூலை 1, 2023 முதல் செயலிழந்து விட்டது என்று அர்த்தம். ஆதாரை பான் அட்டையுடன் இணைக்காதோரின் பல […]

மூளையை பாதிக்கும் அறியவகை அமீபா தொற்று காரணமாக கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பனவல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரியவகை மூளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த நோய் அமீபா மூலம் பரவுகிறது. நாசித்துவாரங்கள் மூலம் மனித உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மூளையை சென்று தாக்குகிறது. இது முதன்முதலாக 2016-ம் ஆண்டு […]

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி உரிய காலத்தில் தமிழக அரசுக்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட வேண்டும். ஆனால், ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி நீர் இதுவரை தமிழ்நாட்டிற்கு […]

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவதூறு வழக்கில் சூரத் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி, ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரிய மனுவை சூரத் […]

லாரி கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பேருந்துகளை காட்டிலும் லாரி ஓட்டுநர்கள் அதிக தூரம் வண்டியை இயக்கி வருகின்றனர். ஒரு வாரம் கூட தொடர்ச்சியாக லாரியை இயக்கும் நிலை ஏற்படலாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சரக்கு லாரிகள் வழக்கமாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் போது பல்வேறு தட்ப வெப்பநிலையை ஓட்டுநர்கள் எதிர்கொள்கின்றனர். அதனால் உடல் […]

சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு நிர்வாக தரப்பில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி நிலவரப்படி, தங்களது சொத்துப் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை ஏராளமான அரசு ஊழியர்கள் தங்களது சொத்துப் பட்டியலை தாக்கல் […]