மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகள் தேர்வின் (II), 2022 முடிவுகளின் அடிப்படையில் 302 பேர் இறுதியாக தகுதி பெற்றுள்ளனர். விண்ணப்பதாரர்கள் http://www.upsc.gov.in என்ற UPSC இணையதளத்தை அணுகுவதன் மூலமும் முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம். இருப்பினும், தேர்வர்களின் மதிப்பெண்கள் 30 நாட்களுக்கு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வளாகத்தில் ஒரு கவுன்ட்டர் உள்ளது. தேர்வர்கள் […]

டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வழங்குவது தொடர்பாக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி வங்கிகள் மற்றும் பிற கார்டு வழங்கும் நிறுவனங்கள் தங்களின் டெபிட், கிரெடிட் மற்றும் பிரீபெய்டு கார்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு நெட்வொர்க்கில் வழங்க வேண்டும். இது பல அட்டை நெட்வொர்க் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டு […]

உங்களின் வங்கி கணக்கில் இருந்து 436 மற்றும் 20 ரூபாய் என மொத்தம் 456 ரூபாய் கழிக்கப்பட்டதா என உடனே சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நடந்து இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் PMSBY மற்றும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் PMJJBY ஆகிய இன்சுரன்ஸ் திட்டங்களுக்காக பணத்தை கழிப்பதாக வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரண்டு […]

நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகின்றது. இந்த டயல் கர்நாடக மாநிலத்தில் தக்காளி திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடகாவின் பேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து 2.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் 20 கிலோ தக்காளி திருடப்பட்டதாக போலீஸார் […]

ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். இந்த பயனாளிகள் 60 வயதை அடைந்தவுடன், அவர்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என கல்யாணம் முதல் அமைச்சர் மனோகர் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதையடுத்து, […]

வந்தே பாரத் போல வந்தே சாதாரன் என்ற ஏசி அல்லாத நவீன வசதிகள் கொண்ட புதிய ரயில் பெட்டிகளை தயாரிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீண்ட தூர பயணத்திற்காக ஸ்லீப்பர் வசதிக்களுடன் கூடிய இந்த ரயிலை சென்னையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள். இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது பெரும் புரட்சியை செய்து வருகிறது என்றால் அது மிகையல்ல. […]

பெங்களூருவில் ஹோட்டல் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சன்னப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (34). இவரது மனைவி ரஞ்சிதா (23). இவர்கள் சன்னசந்திராவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அருண்குமார் கடந்த ஜூன் 29ஆம் தேதி தெற்கு பெங்களூருவில் உள்ள காட்டிகெரேபாளையாவில் உள்ள […]

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் காதலி தனியாக அழைத்ததால், ஆசையுடன் சென்ற இளைஞர், கடைசியில் எதுவுமே இல்லாமல் நிர்வாணமாக நடுரோட்டில் பரிதவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”பாதிக்கப்பட்ட பாலாஜி ஷிவ்பகத் என்பவர் ஷஹாபூரில் கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகலாக போயர் என்ற பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அது மெல்ல காதலாக மாறியதில் இருவரும் உறவில் இருந்துள்ளனர். இதற்கிடையே, […]

மத்தியப்பிரதேசத்தில் பாஜக பிரமுகரால் சிறுநீர் கழிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் கால்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கழுவி மரியாதை செலுத்தினார். மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க, அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்து அவமதித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்த நிலையில், அம்மாநில […]