எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான சில சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தது. மேலும், இந்த சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டிய பயனாளிகளை மாநில அரசுகள் அடையாளம் கண்டு தீர்மானிக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. LPG க்கு […]

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு […]

மத்திய கிழக்கு அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவரது ஈரானிய பிரதிநிதியும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இந்தியா செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது “ வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரும் ஈரான் வெளியுறவு அமைச்சரும் சமீபத்திய நாட்களில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர். கடைசியாக […]

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை குறித்த சமீபத்திய செய்திகளை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆன்லைனில் எரிவாயு முன்பதிவுகளைத் தேடும் நுகர்வோரை அவர்கள் குறிவைத்து புதிய வகையான மோசடிகளை செய்து வருகின்றனர். சிலிண்டரை உடனடியாக வழங்குவதாகவும், கூடுதல் சிலிண்டர்களை வழங்குவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். முன்கூட்டியே பணம் செலுத்தினால் கேஸ் அவசரமாக வழங்கப்படும் என்று வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் போலி வலைத்தள […]

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB), சட்டவிரோதமாக திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் ஆடியோபுக் ஆகியவற்றை பகிர்ந்து வந்த 3,000-க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு அணுகலை முடக்குமாறு மெசேஜிங் தளமான Telegram நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொழில்நுட்ப சட்டத்தின் இடைநிலை சேவை வழங்குநர் பொறுப்பு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் ஆடியோபுக்குகளை பைரசி முறையில் பகிர்ந்து வந்த 3,000-க்கும் அதிகமான டெலிகிராம் சேனல்களை […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உள்நாட்டு நுகர்வோர் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படுமா என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், இந்த நேரத்தில் உள்நாட்டு எரிவாயு விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும், மக்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்தக்கூடாது என்றும் இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா, […]

பிராசசர்கள் (Processors), கிராபிக்ஸ் கார்டுகள் மற்றும் மெமரி போன்ற முக்கிய பாகங்களின் விலை உயர்வு காரணமாக, இந்த ஆண்டில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளின் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. விலை உயர்வுக்கான காரணங்கள்:தொழில்துறை வல்லுநர்களின் கருத்துப்படி, தனிநபர் கணினிகளின் (PC) விலை உயர்விற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன: DDR RAM விலை உயர்வு: கடந்த சில மாதங்களாக மெமரி […]

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இதனால் கேஸ் முன்பதிவு மையங்களுக்கு நேரடியாக நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு […]

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக எல்பிஜி சிலிண்டர்களின் பற்றாக்குறை பல நகரங்களில் ஏற்பட்டுள்ளது.. நாட்டின் முக்கிய நகரங்கள் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கான உணவு சேவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. IRCTC தனது உணவு வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. […]

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வரும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை என்றும், அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய பாடுபடுகிறது என்றும் கூறினார். புதன்கிழமை கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இந்த கருத்தை கூறினார். தற்போதைய சூழலில் இந்தியா வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை சிக்கலில் விடாமல் பாதுகாக்கும் நாடாக மாறியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். […]