தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பி.எஃப் (EPFO) திட்டத்தில், மத்திய அரசு ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுவரை பி.எஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறை இருந்தது. ஆனால், இனி உங்கள் மொபைலில் உள்ள UPI செயலி மூலமே நொடிப் பொழுதில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, பிப்ரவரி 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில், சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய, இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று […]
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு, On-Screen Marking (OSM) எனப்படும் திரைமுக (டிஜிட்டல்) மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை பிப்ரவரி 17, 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி அனைத்து இணைப்பு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் CBSE அறிவிப்பு அனுப்பியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், மதிப்பீட்டு […]
சமூக ஊடகங்களில் பகிரப்படும் AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பாக, இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட எந்த உள்ளடக்கமாக இருந்தாலும், அதை தெளிவாக குறிச்சொல் (label) மூலம் அடையாளம் காட்ட வேண்டும் என்ற புதிய விதியை அரசு கொண்டு வந்துள்ளது. இது வெறும் “AI content” என்று பெயரளவில் குறிப்பிடுவது மட்டும் அல்ல. தெளிவாகக் காணக்கூடிய குறிச்சொற்களும் (visible […]
ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, அனைவருக்கும் சமையல் கேஸ் கிடைக்கச் செய்வதற்காக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் கூடுதல் சலுகைகளை அரசு வழங்குகிறது. முதல் முறையாக எரிவாயு இணைப்பு பெறுபவர்களுக்கு, எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 300 மானியம் […]
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் பணிகளில் உள்ளூர் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரிச் சட்டம், சாமானிய மக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் சில முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா, வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. இதில் பான் (PAN) எண்ணைக் குறிப்பிடுவதற்கான வரம்புகள் கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வங்கிக் கணக்கு […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று, பாபர் மசூதி பிரச்சினையில் தனது கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார், பாபர் அமைப்பு ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது என்று அவர் தெரிவித்தார்.. பாராபங்கியில் ஒரு மதக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் “ 10வது ஸ்ரீ ஹனுமான் விராட் மகாயக்ஞம் மற்றும் ஸ்ரீ ராமர்ச்ச பூஜையின் போது பாராபங்கியில் உள்ள ஸ்ரீ ராம் ஜானகி கோவிலில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றினார். “சிலர் […]
கேரள மாநிலம் கொல்லத்தில் ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கொல்லம் அரிக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜன்பாபு (54), அந்தப் பகுதியில் ‘முராரி தந்திரி’ என்ற பெயரில் பிரபலமான ஜோதிடராக வலம் வந்துள்ளார். இவரை நம்பி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், தனது 16 வயது மகளுடன் ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாக […]
குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையை, பம்பாய் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் குறைத்துள்ளது. ஆயுள் தண்டனையாக இருந்த சிறைத் தண்டனை, 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி, காட்கோபார் பகுதியில் வசிக்கும் ஒருவர். 2016 டிசம்பர் மாதத்தில், அண்டை வீட்டில் வசித்த ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு […]

