ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில், மிட்டாய் போன்ற ஒரு பொருள் வாயில் வெடித்ததில் 3 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார். ராம்நகர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட சௌகிபாஸ் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் அலட்சியம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. அக்ஷு என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுமி, அவசர அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது குணமடைந்து வருகிறார். சம்பந்தப்பட்ட கடைக்காரரை […]

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. கடைசி நேர பயண முன்பதிவுகளை மேலும் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நியாயமான முறையில் செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே 2026-ஆம் ஆண்டிற்கான டாட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே உலுக்கியது. 260-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக […]

இந்தியாவின் போக்குவரத்து முதுகெலும்பாக திகழும் ரயில்வே துறையில், சுமார் 7,300-க்கும் மேற்பட்ட நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையமும் ஒரு தனித்துவமான பெயரோடு அடையாளப்படுத்தப்படும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஒரு ரயில் நிலையம் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவிதப் பெயரும் இல்லாமல் இயங்கி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிராமங்களுக்கு இடையே மூண்ட பெயர் யுத்தம் : மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரிலிருந்து சுமார் 35 கி.மீ […]

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இப்போது பலரையும் பீதியடையச் செய்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு டெலிவரி ஊழியர் கல்லறைத் தோட்டத்தில் இருந்து உணவு ஆர்டரைப் பெற்றதாகத் தெரிகிறது. அந்த டெலிவரி ஊழியர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை அழைத்து வந்து உணவைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இரவின் இருளிலும் அமைதியிலும் கல்லறையில் இருந்து உணவை வழங்கப் பயந்த அந்த டெலிவரி ஊழியர், அங்கிருந்து […]

கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டம் கோட்டூர் பகுதியில், சொத்து மற்றும் பணத்திற்காக பெற்ற தாய், தந்தை மற்றும் உடன்பிறந்த தங்கையையே இளைஞர் ஒருவன் படுகொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோட்டூரை சேர்ந்த பீமராஜ் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 27 வயதில் அக்ஷய் என்ற மகனும், அமிர்தா என்ற மகளும் இருந்தனர். சமீபத்தில் பீமராஜ் தனது சொத்து ஒன்றை விற்றதன் மூலம் சுமார் 1.2 கோடி […]

டெல்லியில், தந்தை என்ற உறவுக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவர், தனது 14 வயது மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று கௌரவ் குமாரின் மனைவி தனது சொந்த ஊரான பீகாருக்குச் சென்றிருந்த நிலையில், கௌரவ் தனது 14 மற்றும் 8 வயதுடைய இரு […]

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி. மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் நிம்மதியைத் தரும் என்று கூறலாம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதில், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்காகப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, பெண்களின் நலன் மற்றும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. இன்றும், நாட்டில் சில பெண்கள் விறகு அடுப்பில் […]

மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வந்த நீண்ட கால அரசியல் தேக்கநிலை முடிவுக்கு வந்துள்ளது. வன்முறையால் தத்தளித்த அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு, புதிய அரசு அமைவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இனக்கலவரம் மற்றும் நிர்வாக சிக்கல்களுக்குப் பிறகு, மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அரியணையில் ஏறுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே […]

இன்று பங்குச் சந்தைகளும் எஸ்ஐபி திட்டங்களும் பிரபலமாக இருந்தாலும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் முதலீட்டாளர்களை தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. அத்தகைய நம்பகமான திட்டங்களில் ஒன்று தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. […]