கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் அதிமுக ஆட்சியை இழந்தது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதிமுக இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி இரண்டாக பிளவு பட்டு இருந்தது. இருவரும் இரு பிரிவினராக பிரிந்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் […]

இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம். குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு […]

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று உழைப்புக்கான கண்ணியம் இல்லாதது என்று ஆர்.எஸ்‌.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மக்கள் வேலைகளைத் தேடி ஓடுவதை நிறுத்த வேண்டும், எந்த ஒரு வேலையும் சமுதாயத்திற்காகச் செய்வது போல் பெரியது அல்லது சிறியது என்று முத்திரை குத்த முடியாது. “மக்கள் எந்த வகையான வேலையைச் செய்தாலும், அதை மதிக்க வேண்டும். உழைப்புக்கான கண்ணியமின்மை […]

சாதிகளை உருவாக்கியது பூசாரிகள் தான்  கடவுள் இல்லை என  ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ராஷ்ட்ரிய சுயம் சேவக் இது இந்தியாவில் இருக்கக்கூடிய  மதவாத அமைப்புகளில் ஒன்று  இதன் தலைவராக இருப்பவர்  மோகன் பகவத் . இந்த அமைப்பானது மகராஷ்டிரா மாநிலம்  நாக்பூரை தலவிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  ஒரு அமைப்பு. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இந்த […]

ஈரோடு கிழக்கு   இடைத்தேர்தல்  வருகின்ற 27 ஆம் தேதியின் நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம்  கலை கட்டி உள்ளது. அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரமுகர்கள் என அனைவரும் ஈரோடு கிழக்கு பகுதியில் முகாமிட்டு  தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னால் எம் எல் ஏ  கே எஸ் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் மற்றும் […]

அதானி குழுமத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ வங்கியும் கடன் வழங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அதானிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுன் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு […]

இந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரவீந்திர நாட்டிய மந்திர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர் நாம் ஒரு வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும்போது, ​​சமூகத்தின் மீது நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வேலையும் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக இருக்கும்போது, எந்த வேலையும் எப்படி பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது […]

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.. இதனிடையே , அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் கோரியும், இரட்டை இலை சின்னம் […]

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது. தற்போது நடைபெற்று வரும் ஹிண்டன்பர்க்-அதானி பிரச்சனைக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி இன்று நாடாளுமன்றத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தவுள்ளது. ஆயுள் […]