சேலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு விவகாரம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்துப் பேசிய அவர், நிர்வாகச் சீர்கேடுகளால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, “தமிழகத்திற்கு என ஒரு நிரந்தர டிஜிபி (DGP) கூட நியமிக்கப்படாத நிலையில், காவல்துறை நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது” என்று குறிப்பிட்டர். மேலும், முதல்வர் […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூர் மண்டலத்தில் அதிமுகவுக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியும், வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான வாசு, திடீரென நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2006 முதல் 2010 வரை மாவட்ட செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. மேலும் தவெக தலைமையையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.. கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை […]

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், யாருடன் கைகோர்க்கப் போகிறது என்பதே தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக். இந்நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளைக் கணிசமாக தன்வசம் வைத்துள்ள எஸ்டிபிஐ (SDPI) கட்சி, விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், “தேர்தல் கூட்டணி குறித்த இறுதி […]

தமிழக அரசியல் சதுரங்க வேட்டையில், எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய மூவரும் ஒரே நேர்க்கோட்டில் சிந்திப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் கட்சியின் அரசியல் வலிமையை நிலைநிறுத்தவும், கௌரவமான தொகுதிகளைப் பெறவும் இவர்கள் கடைபிடிக்கும் நிதானமான போக்கு, பெரிய கட்சிகளுக்கு ஒரு […]

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக அதிமுக-வுக்கு வலுசேர்க்கும் கொங்கு மண்டலத்தில் ஏற்படக்கூடிய சிறு சரிவுகளை, டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் வாக்குகளை கொண்டு ஈடுகட்டலாம் என்பதே எடப்பாடியின் கணக்காக இருந்தது. ஆனால், தற்போது அந்த மண்டலத்திலேயே மூத்த நிர்வாகிகளுக்கு இடையே வெடித்துள்ள அதிகாரப் போட்டி, […]

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படும் இந்தப் புகாரில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் […]

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அரசியல் களத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வரும் இத்திட்டம், சமீபத்திய இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குப் பிறகு சுமார் 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, பெண்களின் வாக்குகளை […]