தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போதைய திமுக அரசின் இறுதிக்கட்ட அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விரைவில் தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ‘இடைக்கால பட்ஜெட்’-டிற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக, அடுத்த சில மாதங்களுக்கான […]

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக – பாஜக இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி முன்வைத்த விமர்சனத்திற்கு, தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டு என்ன..? மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்.பி., நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் செல்வாக்குமிக்க அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி களம் இறங்கியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இதுதொடர்பான சந்திப்பு நடைபெற்றது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி […]

3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது அரசியல் வியூகத்தையோ அல்லது தேர்தல் நிலைப்பாட்டையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய், சமீபத்தில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த பேச்சுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.. தனது சம்பளத்தை கருப்பு பணமாக வாங்கும் விஜய்யே ஊழல்வாதி என்றும் விஜய் எல்லாம் ஊழலை பற்றி பேசக்கூடாது என்றும்  விமர்சித்து வந்தனர். அந்த […]

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் நேற்று கன்னி உரையாற்றினார்.. அப்போது அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்ற பின்னர், பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் முதல் முறையாக பேசினார்.. அப்போது அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ் மொழியை இழிவுப்படுத்தியதாக கூறினார்.. இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “ பிச்சைப் […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்து வரும் அதிரடி நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ள சூழலில், பாஜக கூட்டணியிலும் தமக்கான பிடி நழுவி வருவதை உணர்ந்துள்ள ஓபிஎஸ், தற்போது தனது அரசியல் வாழ்வை தக்கவைக்க புதிய வியூகங்களை கையாண்டு வருகிறார். சமீபகாலமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக […]

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் அதிகாரப் போட்டி முற்றியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. கட்சியின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளராக கருதப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே விஜய்யின் அரசியல் பிம்பத்தை வடிவமைப்பதிலும், மாநாடுகளைத் திட்டமிடுவதிலும் ஜான் ஆரோக்கியசாமி முதுகெலும்பாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், சமீபத்தில் […]

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக கடந்த 30-ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 […]