தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]

திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; “மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய […]

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதகற்காக அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார்.. அவருக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களும், இந்திய தூதரக அலுவலர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நேற்று நடந்த தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.. இன்று கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் […]

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் ஆணையமான டிஎன்பிஎஸ்சி (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.. 1910 காலியிடங்களுக்கு சுமார் 76000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.. நேற்று இந்த பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தாள் 1 நடைபெற்றது.. சுமார் 51,000 பேர் இந்த தேர்வை எழுதினர்.. இந்த நிலையில் இந்த தேர்தலில் தவறான மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து […]

தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் பழிபோடுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின் என்பதை அவரே பல விதங்களிலும் நிரூபித்து வருகிறார். அமெரிக்க அரசு தற்போது […]

காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் ​பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்​படை​யில் தற்​போது டிஜிபிக்​களாக உள்ள சீமா அகர்​வால், ராஜீவ்கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் டிஜிபி​யாக வரலாம் என்ற எதிர்​பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 மாதங்களில் […]