தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் கறையாக படிந்துள்ள கரூர் வேலுசாமிபுரம் சம்பவம் தொடர்பான விசாரணை, இப்போது டெல்லி சிபிஐ (CBI) தலைமையகத்தில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் […]

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. கடந்த டிசம்பர் 12, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கூடுதலாக 1,69,4339 பெண்கள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 1,30,69,831 பயனாளிகள் மாதம் 1,000 […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பே அதிமுக தலைமைக்கு அதிரடியான சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, வரும் தேர்தலில் தேமுதிக போட்டியிட 30 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒரு […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், தவெக நிர்வாகிகள், கரூர் மாவட்ட காவல்துறையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என பலேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. கரூரில் உள்ள […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். காலை 11.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்திற்குள் சென்ற விஜய் விசாரணை முடிந்து மாலை […]

மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் […]

ரவுடிகளின் தலைமையிடமாக தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு […]

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் சம்பவத்தின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே தவெக-வின் முக்கிய நிர்வாகிகளான […]

திண்டுக்கல் மாவட்ட அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மேட்டுப்பட்டி பகுதியில் ஒரு பிரம்மாண்ட அரசியல் இணைப்பு விழாவை முன்னெடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த உற்சாகமான நிகழ்வில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற […]

பாட்டாளி மக்கள் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுக்கோப்பிற்கும் முரணாக செயல்பட்டதாகக் கூறி 3 எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவக்குமார் (மயிலம் சட்டமன்ற உறுப்பினர்), சதாசிவம் (மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து கட்சி விரோதச் செயல்பாடுகளில் […]