திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலான நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய விமர்சனமும், அதற்கு த.வெ.க தரப்பு அளித்த பதிலடியும் பரபரப்பை கிளப்பியுள்ளன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, விஜய் ஒரு மேடையில் பேசிய “கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும்” என்ற […]

மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக அதிகரிக்க எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இன்றைய முதல்வர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். […]

ஈரோட்டில் இன்று நடக்கவிருக்கும் ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்சியினரும், பொதுமக்களும் […]

வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது.. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால், அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் வழங்குகிறது.. இந்த திட்டத்தின் கீழ் 25.25 […]

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்திருப்பது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் டிசம்பர் 20, 2025 அன்று நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான […]

விஜய் பரப்புரை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை […]

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரிய தொகுதியான கரூரிலிருந்து மாறி வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜி 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவர் கொங்கு மண்டலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த, கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் […]