நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டமானது சேர்மன் நளினியின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக துணை சேர்மன் கார்த்திகேயன், சுயேச்சை கவுன்சிலர் சினேகா, பொறியாளர் சண்முகம், கமிஷனர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சுயேச்சை கவுன்சிலர் சினேகா துணை சேர்மன் கார்த்திகேயனை செருப்பால் அடிக்க முயற்சித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அக்டோபர் 23ஆம் தேதி துணிக்கடையில் வாழ்த்து தெரிவிக்கும் போது சினேகாவின் கணவரை […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
”இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்” என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”இந்த கூட்டத்தின் நோக்கம் வரும் 4ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திருச்சியில் காகித தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். பின்பு அரியலூர் மற்றும் […]
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் மாநில முதலமைச்சருமான சரத் பவாருக்கு இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சரத் பவாரை தொடர்பு கொண்டு அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வருகிற நவம்பர் […]
தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ் வழியில் […]
நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அரசின் வேளாண்மைத் துறை திட்டங்கள் பற்றி விளக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நவம்பர் 1ஆம் தேதியன்று, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, […]
கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்றபின் மணமக்களுக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மாதிரி வாழக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் உதய சூரியன் இல்லத்தில் திருமண விழா நடைபெற்றத. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்கள் டாக்டர் பர்னாலா- டாக்டர் சங்கவியை நேரில் ஆசிர்வாதம் செய்தார். பின்னர் மணமக்களுக்கு அறிவுரை வழங்கியபோது, ’’ மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கண்டிப்பாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். […]
பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளிஅவரைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் என கடுப்பாக பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கோவை கார் வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் […]
ஆட்சியாளர்களின் கைப்பாவையாக தமிழக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக பா.ஜ.க. அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’‘ முத்து […]
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம், அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பலரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் […]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது பிறந்த நாளை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ’’ நாட்டில் ஒரே மதம் , ஒரே மொழி என்று கொண்டு வருவதற்கான திட்டங்கள் நடைபெறுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது. இது பல மொழிகள் பேசக்கூடிய, பல தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒன்றியம். இதை […]