குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில், காதலுக்கு தடையாக இருந்த தந்தையை தனது காதலனுடன் சேர்ந்து 17 வயது சிறுமி ஒருவரே திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்ரா தாலுகாவைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர், தனது வீட்டிலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்துப் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அவரது 18 வயது கூட நிரம்பாத மகளே இந்த கொலையின் பின்னணியில் இருப்பது […]

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான கூட்டணி குறித்த புதிய தகவல்கள் கசிந்துள்ளன. இந்தக் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், விஜய் தரப்பிலிருந்து விதிக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய நிபந்தனை ஓபிஎஸ் அணியை சிந்திக்க வைத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் மிக நெருக்கமான இணக்கத்தை கடைபிடித்து […]

2026 சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி: கோவையில் நான் போட்டியிடப் போவதாக சமூகவலைதளங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். கரூர் மக்கள் என்னை அன்பாக, பாசமாக வைத்துள்ளனர். இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்து […]

காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதனால், […]

தவெக தலைவர் விஜய் கடந்த 18-ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா கூறியது சரிதான்.. திமுக ஒரு […]

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. தமிழ்நாட்டில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.. தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு […]