அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனையின் போது எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்க துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, […]

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் இருக்கின்ற பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது. இவர் மீது போடப்பட்டிருந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் இவரை சமீபத்தில் விடுதலை செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தற்போது இவர் தொடர்பான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. நீதிமன்றம் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்து விடுதலை செய்துவிட்ட நிலையிலும், […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று மற்றும் நாளை எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த எதிர்க்கட்சி கூட்டம் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு தனிநபருக்கு எதிராக உருவாகும் கூட்டணி சில மாதங்களுக்கு மேல் நீடிக்காது என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு […]

இஸ்ரோவின் சந்திராயன்3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பூடான் நாட்டு பிரதமருக்கு தன்னுடைய நன்றியை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பூடான் பிரதமரின் அலுவலகம் சார்பாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது சந்திராயன் 3 திட்டத்துக்கான விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சந்திராயன்3 திட்டத்தால் மனித குலம் சிறப்பாக பயனடையட்டும் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவுக்கு பதில் […]

தமிழகத்தில் இருக்கின்ற அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ், பி டி எஸ் போன்ற இடங்களுக்கு இணையதளங்களின் மூலமாக விண்ணப்பம் செய்வது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 12ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக இதற்கு விண்ணப்பம் செய்தனர். […]

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பாக நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு இடையில் நினைவிடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் 134 அதை உயரத்திற்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. மத்திய அரசும் இதற்கு அனுமதி அளித்திருக்கின்ற நிலையில் 36 கோடி ரூபாய் […]

மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. அதோடு அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளியிட்டார். அத்தோடு மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் மதுரையில் வரும் […]

தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, மாநிலங்களவை எம்பி ஆக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்பு உள்ளது. கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பணியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் தமிழகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, பாஜக வளர்ச்சி போதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மக்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு […]

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார். மத்திய நீர்‌ மேலாண்மை ஆணையத்தில்‌ நடந்த கூட்டத்தில்‌, கர்நாடகாவில்‌ இருந்து தண்ணீர்‌ திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால்‌ மழை பற்றாக் குறையால்‌, கர்நாடகா மாநிலத்திற்கு குடிநீர்‌ பிரச்னை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் போதுமான ‌தண்ணீர்‌ இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில்‌ தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் […]

ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரங்களாக வாராகி யாத்ரா என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, பவன் கல்யாண் ஒரு நடிகர் […]