திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல், அந்த கட்சியை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு பாஜகவின் நடவடிக்கை இருக்கிறது. மேலும் திமுகவை ,பாஜக தலைமை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதே சமயம் அதிமுக இது போன்ற விவகாரங்களில் சற்று தன்மையுடனே நடந்து கொள்கிறது. உண்மையிலேயே தமிழகத்தை பொறுத்தவரையில் எதிர்க்கட்சி […]

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்க்கும் விதமாக, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆக்குணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்ற ஒரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது இல்லை என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு […]

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், நரேந்திர மோடி அரசாங்கம் நடுத்தர வர்க்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது, ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டபோது, சில இடங்களில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசின் […]

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளைச் சிறப்பித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி […]

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக  வாக்குறுதி கொடுத்த ஆதாரத்தை தந்தால், அவர்களுக்கு 1 லட்சத்து 200 ரூபாய் வழங்கப்படும் என பாஜக போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து மீட்டால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடலாம்.. […]

திமுக எம். பி டி.ஆர் பாலு தொடுத்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை […]

வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதை அடுத்து, டெல்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கலாம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கும் மக்களின் இயல்பு […]

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் […]

தொழில்நுட்ப வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை விட தீய செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பணம் பறிக்க திட்டம் போடும் கும்பல் சமூகவலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி பணம் கேட்டு மிரட்டி வருகிறது. அடுத்த கட்டமாக ஓடிபி கேட்டு வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடவும் செய்கிறது. இந்நிலையில், தற்போது வீடியோ கால் செய்து அந்த வீடியோவை பதிவு செய்து அருகில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பது […]