மல்லை சத்யா, மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் நீடித்து வந்த நிலையில் அண்மையில் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இருவருக்கிடையே முதல் போக்கு தெரிகிறது. இது பொதுச்செயலாளர் வரை மீண்டும் சென்ற நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக […]

இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் தவெக ஆர்பாட்டத்திற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் […]

பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைமை அறிவித்துள்ளது.. நேற்று ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அனைத்து கட்சிகளையும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமித்ஷா கூறியிருந்தார். தவெகவை கூட்டணியில் இணைப்பது குறித்தே அமித்ஷா சூசகமாக கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைமை […]

சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். 2026 தேர்தலில் 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியினரின் விருப்பம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அரசியலில் தவறு நடப்பது இயல்புதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்து செய்த தவறை ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் மதிமுக வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை. […]

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை […]

சீமான் பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் சாதி வெறியின் எச்சம் என்று விசிகவின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் மதுரையில் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். அப்போது ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது என்று ஆவசேமாக பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை […]

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாமக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.. அந்த கடித்தத்தில் “ என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16&ஆம் நாள் […]