ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என அண்ணாமலை தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள். யாரையும் பிரிப்பதற்காக இல்லை. பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட நல்ல சட்டம். யாருக்கு எதிராக உங்க சட்டம் இருக்கப் போவது கிடையாது” என்றார். பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக நிலைப்பாடு […]

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது. சட்டவிரோதமானது என்று தெரிவித்து […]

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வெற்றி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதில் பல திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் திட்டங்கள் பொது மக்களிடையே […]

புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் டாக்டர் ஜெய் ராஜமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம் […]

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டித்து எதிர்கட்சிகள் கடுமையான […]

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரையில் தமிழக அரசியல் சரித்திரத்திலேயே 28 வயதில் மேயரானது இவர் மட்டும்தான். அதோடு சென்னையின் முதல் பெண் மேயர் என்ற பெயரையும் இவர் பெற்றார். அதோடு இவருக்கு அரசியல் அனுபவம் அவ்வளவாக இல்லை என்றாலும் மூத்த அமைச்சர்கள் பலர் இவர் அருகில் இருந்து இவரை வழிநடத்த தொடங்கினர். அதன் பிறகு […]

அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் திமுக முனைப்பாக இருக்கிறது. அகில இந்திய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இதனால்தான் திமுக அமைச்சர்களை குறி வைக்கிறார்கள் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை பார்த்து […]

செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக தெரிவித்து, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த […]

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி […]

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த மாதம் 27 ஆம் தேதி முடிவுற்றது.இந்த நிலையில் அதன் தீர்ப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வால் இன்று வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு, நீதிபதி பரத […]