தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன.. இதில் காங்கிரஸ் கட்சிக்கு முதலில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.. பின்னர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன.. முதலில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், திமுக […]

திமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ அரசியல் சூழல் காரணமாக தவெக கூட்டணியில் இணைந்தோம். ஸ்டாலினோ, உதயநிதியோ எங்கள் முடிவை எதிராக பார்க்கவில்லை.. தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியை கூட்டணியை பல தரப்பினர் முயன்றனர்.. 2 ஆண்டுகளாக என்னை குறிவைத்து காய்களை நகர்த்தினர்.. ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த இடம் தரமாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டினேன்.. […]

கோவையில் 10 சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் […]

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.. இதன் மூலம் தமிழகத்தில் 1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 8 பட்டியலின எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.. அதே போல் 4 பெண் அமைச்சர்களும் இடம்பெற்றனர்.. இந்த அமைச்சர்களின் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.. ரமேஷ் […]

திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குப்பதிவு நாளில் தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் திமுகவின் சேகர் பாபு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குச்சாவடிக்கு வெளியே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. […]