விசிக தலைவர் திருமாவளவன் இன்று பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது விஜய்யின் தவெக விசிகவின் வாக்குகளை பிரிக்கப் போகிறது என்ற கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு பதிலளித்த திருமாவளவன் “ இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.. இப்படி சொல்வதன் மூலம் விசிக உணர்ச்சி வயப்படும், திருமாவளவன் உணர்ச்சி வயப்படுவார்.. வார்த்தைகளை விட்டுவிடுவார் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்க்கிறார்.. விஜய் ஒரு சினிமா நடிகர்.. அவருக்கென ஒரு ரசிகர் […]

பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வழக்குகள் அதிகரித்துவிட்டன என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேசிய அவர்; அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. போதுமான ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் […]

தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் தேர்தல் ஆணையம் கடந்த ஆறு மாதங்களில் 29 முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தாமதங்களை குறைக்கும் வகையில் 30-வது முன் முயற்சியாக தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது. இதன்படி வாக்குகளை எண்ணும் பணி 2 பிரிவுகளைக் கொண்டதாகும். தபால் வாக்குகளை எண்ணுதல் மற்றும் மின்னணு […]

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிசம்பர் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து ம‌க்க‌ளுக்குமான‌ சாதிவாரி க‌ண‌க்கெடுப்பை உட‌னே ந‌ட‌த்த வேண்டும்.அதுவ‌ரை இடைக்கால ஏற்பாடாக வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டைத் த‌டுக்கின்ற நீதிம‌ன்ற‌ தடையாணையைப் போக்கி வன்னியர்களுக்கு இட‌ ஒதுக்கீட்டை வ‌ழ‌ங்க வேண்டும் என்ற […]

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.. தனது சுற்றுப்பயணத்தின் பேசிய அவர் “ காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கண்ட கட்சி.. அப்படிப்பட்ட கட்சி திமுகவிற்கு அடிமையாக உள்ளது.. இப்படி அடிமைத்தனமாக இருப்பது காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் இருந்து வந்தவர்.. பிச்சைக்காரர்களின் ஒட்டுப்போட்ட சட்டை மாதிரி, இவர் பல கட்சிக்கு போயிட்டு வந்தவர்.. […]

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, அதற்கான ஆணைகளை மக்களிடமே நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. ஒரே […]

கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நீலகிரி தொகுதியில் பேசிய அவர்; நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார் உதயநிதி. அதிக கடன் வாங்குவதில், கமிஷன், ஊழலில், வாரிசு அரசியலில், ஸ்டிக்கர் […]

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. […]