டெல்லியில் நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய் தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கமாக பேசியிருந்தார்.. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருப்பதாக கூறினார்.. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து […]

ரூ.134.83 கோடி மதிப்பில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெற்று ஏமாற்று அறிவிப்பு என […]

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது… இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.. மேலும் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு 32 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார்.. இந்த குழு தமிழக முழுவதும் கள ஆய்வு செய்து தங்கள் […]

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நான் அரசியலுக்கு வர வேண்டுமா..? வேண்டாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.. நீங்கள் […]

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உங்கள் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. […]

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் ஒருவர், தவெக பெண் நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. […]

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி தவெக நிர்வாகி […]

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கடந்த மாதம் 27-ம் தேதி டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.. தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பினார்.. இந்த நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் 2-வது முறையாக நேற்று டெல்லி சென்றார்.. பிரதமர் மோடி […]

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.. மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் […]