ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் தனது 2 நாள் சிங்கப்பூர் […]

என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. அப்போது கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் பேசுகையில், ”சமத்துவ மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என 2026இல் தெரியவரும். போதை இல்லா தமிழகத்தை […]

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவம்.. மத்திய உள்துறை அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் 25 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் […]

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல் முதல் நாளே வளைந்து வளைந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய […]

இன்று நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் மேலும் சோழர்கால செங்கோல் என்று குறிப்பிடப்படும் செங்கோலை நாடாளுமன்றத்தில் மைய வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே அதற்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இடத்தில் வைத்தார் நரேந்திரமோடி. இதன் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் தற்போது தான் சரியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது செங்கோலை வழங்கிய தமிழகத்தின் ஆதீனங்களுக்கு நன்றி எதிர்காலத்தில் நாடாளுமன்ற […]

டெல்லியில் கடந்த 2020 ஆம் வருடம் தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி இன்று காலை 12 மணிக்கு தொடங்கியது. ஆனாலும் அதற்கு முன்னதாகவே பாரம்பரிய சடங்குகள் இன்று காலையிலேயே தொடங்கிவிட்டது. இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமர் […]

இன்றைய தினம் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமானது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி மதியம் 12:00 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில், அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு […]

தலைநகர் டெல்லியில் சுமார் 96 வருடங்கள் பழமையான நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாததன் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து அதன் அடிப்படையில், சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் வருடம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இத்தகைய நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய […]

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா மோடியை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பு விடுத்தார். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தால், லோக்சபா அறையில் மொத்தம் 1,280 உறுப்பினர்கள் இடம் பெறலாம். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. […]

நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இதில் முக்கிய நிகழ்வாக தமிழகத்தின் முன்னணி சைவ மடாதிபதிகள் பாரம்பரியம்மிக்க செங்கோலை பிரதமர் நரேந்திரமோடிக்கு தரவுள்ளனர். இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளது. இந்த செங்கோல் நாடு சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதினத்தால் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த செங்கோல் மறுபடியும் புதிய […]