தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ் கட்டாயபாடம் என்பதை தனியார் பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா, தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் படித்து இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு முழுமையான செயல்வடிவம் கொடுக்கும் வகையில், […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்புக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருந்தன. இதற்கிடையே, கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் […]
தமிழக மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் தொடங்கிய இந்த சோதனை கேரளா ஹைதராபாத் பெங்களூர் என்று செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது டாஸ்மாக் மூலமாக பல கோடி ரூபாய் ஊழல் […]
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கரூர், திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. […]
இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ. 75 நாணயத்தை புழக்கத்திற்கு விடப்போவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது. இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் […]
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடை 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலஜி சகோதரர் அசோக் என்பவரின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வீட்டில் திடீரென சோதனை நடத்தப்படுவது அரசியல் […]
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பகுஜன் சமாஜ் கட்சி என் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு […]
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதானியங்களை கண்டுபிடிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறுதானியங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி என்பது இப்போதைக்கு இல்லை என்றும் […]
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது. இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு குழு கூட்டம் ஜுன் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை தொடர்ந்து நிலை நாட்டிட போராடி வரும் நமது கட்சியின் செயற்குழு கூட்டம் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் ஜூன் 7ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து […]