தமிழக முழுவதும் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்புகள் வெளியான நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்கள் தரம் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார். அதாவது ஆபத்தான அல்லது ஆபத்தானதாக காட்சியளிக்கும் மரங்கள் உள்ளிட்டவற்றை பள்ளி வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும் அதேபோன்று அபாயகரமானதாக உள்ள மின் கம்பங்கள் அல்லது […]

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் முக.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலாண்டு இன்வெஸ்ட்மென்ட் நிறுவன உயர் அலுவலர்களை தனித்தனியாக சந்தித்தார். தமிழ்நாட்டில் முதலீடு […]

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காதது ஹிந்து தேசியவாதி வி.டி. சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை […]

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1-ம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக […]

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன. அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 வருடங்களில் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக […]

2030-31ம் நிதி ஆண்டுக்குள் தமிழ்நாட்டை1 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணம் மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து இன்று காலை 11.25 மணிக்கு […]

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்க உள்ளார். இன்று முதல் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். […]

தமிழ்நாட்டில் கழிவுநீர் மரணங்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதன்படி பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் களங்கமாக விளங்குகிறது. ஆகவே அது நவீன இயந்திரங்களை கொண்டு கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை எதிர்வரும் 4 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக அலுவலக மோதலின் போது பன்னீர்செல்வம் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்படும் தற்போது ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் பெற்றுக் கொண்டார்.