fbpx

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்டது..

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லக்ஷ்மணன் வீரமரணம் அடைந்தார்.. லக்ஷ்மணனின் சொந்த ஊரான மதுரைக்கு அவரின் உடல் இன்று கொண்டு வரப்பட்டது.. இந்நிலையில் லக்ஷ்மணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் …

பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி மன்ற தலைவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு,

ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு எடுத்துக்காட்டாக நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி …

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பானிட்டில் 900 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை எத்தனால் தயாரிப்பு ஆலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,

விரக்தியின் உச்சத்தில் இருக்கும் சிலர் (காங்கிரஸ்), கடந்த ஐந்தாம் தேதி அன்று கருப்பு …

திமுக ஆட்சியின் அவலநிலையை போக்க எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை அமைப்பது தான் ஒரே தீர்வாக அமையும் என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச் செல்வன் என்பவர் பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் அரிவாளால் ஒருவரை வெட்ட துரத்திய …

காஞ்சிபுரத்தில் ஒலி முகமது பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு யாரோ மர்ம நபர் காவி துண்டு அணிவித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அப்போது அவர்கள் அம்பேத்கர் …

கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் …

பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்துவதோடு, வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடையுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து, வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை …

தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தினமும் சுமார் 2¼ கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்துவது வழக்கம். 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு முன்பு தனியார் பால் விலை …

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயதை 40ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பை உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல் தொகுதி தேர்வுக்கான …

போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து பேசும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலில் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”போதைப்பொருள் நடமாட்டத்துக்கு துணை செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் விரிவாக …