கர்நாடக மாநில சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் பிரசவராஜ் பொம்மையை தற்போதைய துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சந்தித்து பேசி உள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள கண்டிவரா மயானத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமைய்யாவும் துணை முதலமைச்சராக டி. கே […]

போலியான மது விற்பனை கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு வழங்கினார். அதாவது, சென்னை கிண்டி ராஜ் பவனின் ஆளுநர் ஆரியன் ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சந்தித்திருக்கிறார். அவருடன் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர்ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி […]

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகவும் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து ஒட்டுமொத்தமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே திமுக ஆட்சி குறித்து ஆளுநரிடம் புகார் வழங்கப்படும் என்று அதிமுக தலைமை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இன்று அந்த கட்சியின் […]

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். இவர் மீதும், இவருடைய மனைவி ரம்யா மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு […]

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தன்னை சந்திக்க வருபவர்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் பூங்கொத்து, சால்வைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள வலைதள பதிவில், இனி தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போது மரியாதை நிமித்தமாக எனக்கு வழங்கும் பூங்கொத்து அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதேபோல என் […]

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. மதுவிலக்கு ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு அரசாங்கம் சொல்லும் ஒரே பதில் கள்ளச்சாராயம். ஆனால், கள்ளச்சாராயத்தால் சாவு ஏற்படுகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆளுங்கட்சி ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. எந்த அரசியல் கட்சியினர் […]

கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடம், தனது வாகனப் போக்குவரத்திற்காக அமல்படுத்தப்பட்ட ‘ஜீரோ ட்ராஃபிக்’ நெறிமுறையைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பதிவிட்டிருந்த முதல்வர் சித்தராமையா, தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது வாகனப் போக்குவரத்துக்கான ‘ஜீரோ டிராஃபிக்’ நெறிமுறையை திரும்பப் பெறுமாறு பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டேன். ‘ஜீரோ டிராஃபிக்’ காரணமாக கட்டுப்பாடுகள் உள்ள பாதையில் பயணிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் […]

விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். தமிழ்நாட்டில் விஷச் சாராயம் அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். விஷச் சாராயத்தை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழக பாஜக குழுவினர் அண்ணாமலை தலைமையில் […]

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மான த்தின் விவரங்கள் வருமாறு, வரும் ஜூன் மாதம் 3ம் தேதி மதச்சார்பற்ற தற்போது கூட்டணியின் தலைவர்கள் பங்குபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வட சென்னையில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 20ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்து சிறப்பிக்க […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் முதலமைச்சரின் வெளிநாடு பயணம், கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.