fbpx

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால், திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக அரசு சட்டம் இயற்றியது. திமுக அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடாமல் இருந்ததால், தீர்ப்பு ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் …

தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவுக்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய ஒரு கட்சி பாமக தான் என கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 34ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேடையில் பேசிய அக்கட்சியின் …

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த 11ஆம் தேதி வெடித்த மோதல் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் எல்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால், நட்சத்திர …

இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தங்கரை சனிக்கிழமை அறிவித்தது. ஜக்தீப் தங்கர் தற்போது மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர …

கொரோனா பாதிப்பு அதிகமாக‌ இருந்த காலங்கலில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த இரு வருடமாக மூடப்பட்டு இருந்தது.
மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், இந்த வருடம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களும் மறுபடியும் உற்சாகமாகப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். …

கொரோனா அறிகுறிகளுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பலருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இதே போல் பால் வளத்தூறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று …

அதிமுகவில், மாநிலங்களவை எம்பி சீட் சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரண்டு பேருக்கும் தான் என்று எடப்பாடி தரப்பு முடிவு செய்திருந்த நிலையில்,  ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளரான தர்மருக்கு அந்த சீட் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் தான் ஜெயக்குமார் மற்றும் சி.வி சண்முகம் இருவரும் ஒற்றை தலைமை என்கிற வாதத்தை தீவிரமாக …

அதிமுகவில் இரண்டாம் கட்டமாக நீக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டமாக நீடித்து கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி உட்பட 22 தலைமைக் கழக நிர்வாகிகளை நீக்குவதாக நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று …

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை வெளியிடும்போது, என்ன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதையும் வெளியிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில் விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் தந்தையின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் …

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் காகர்லா உஷா, நந்தகுமார், அறிவொளி, எம்.எல்.ஏ., …