பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் விஜய்யின் அரசியல் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.. பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விஜய் ஒரு தனிப்பட்ட நபராக ஆபத்தானவர் இல்லை.. அவர் ஒரு தனிநபராக அமைதியாக இருப்பார், யாரிடமும் பேசமாட்டார். திரையுலகில் அவர் அமைதியானவர்.. ஆனால் அவர் அரசியலுக்கு வரும் போது ஆபத்தானவர்.. ஒரு தலைமைப் பொறுப்பேற்று வருகிறார்.. நடிகராக இருக்கும் தனக்கு கிடைத்த செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்தி, […]

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் டிச.8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என அனைத்துமே கேள்விக்குள்ளாக்குகிற வகையில் தொழிலுறவு […]

செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கடந்த நவ.19-ம் தேதி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன் (47) பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறித்து இன்று முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர […]

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆளும் கட்சி மீதான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகள் […]

கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், நுழைவுச் சீட்டு வழங்கப்பட்ட சுமார் 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் பேசிய விஜய், காஞ்சிபுரத்தை அண்ணாவின் பிறப்பிடமாக நினைவு கூர்ந்து, அண்ணா தொடங்கிய கட்சியை இன்று நடத்தும் விதம் […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணியின் பலத்தை மட்டுமே நம்பி இல்லாமல், மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் அனைத்துப் பிரதான கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தின் கீழ், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த […]

சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரைம் இழந்து […]