திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாகும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு ஆன்மிகப் பொக்கிஷமாக விளங்குகிறது. இத்தலத்தில், பாண்டவர்களின் தூதராக கண்ணன் தோன்றிய தருணமே, ஆலயத்தின் முக்கிய தரிசனமாக உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான், விஸ்வரூப தரிசனம் காட்டி காட்சி தருகிறார். நான்கு நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களாலும் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி லட்டு அந்தளவுக்கு மக்களிடையே பிரபலம். இதற்கிடையே, கடந்த 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே லட்டு குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார். […]

புராணங்களின்படி, ஆமை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. ஆமை மோதிரம் அணிவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த மோதிரங்கள் பொதுவாக வெள்ளி அல்லது தாமிரத்தால் ஆனவை. இந்த மோதிரம் வாஸ்து குறைபாடுகள் மற்றும் எதிர்மறை ஆற்றலை நீக்கி வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இந்த மோதிரத்தை அணியக்கூடாது. ஆமை மோதிரத்தை அணிந்தால் என்ன நடக்கும்? ஜோதிடத்தின் படி, ஆமை […]

சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழும் வராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறார். வாழ்வின் பஞ்சங்களைப் போக்கும் வாராஹி அம்மனை சரியான முறையில் விரதமிருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் வளங்களை அருளும் சுக்கிரனுடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில், வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளன்று செய்வது நல்லது. சுக்கிரனுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி தாயாருக்கு உகந்த […]

என்ன செய்தால் நம்முடைய வீட்டில் விரைய செலவை தடுக்கலாம் என்ன செய்தால் நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்துவதால் தடைகளை ஏற்படுத்தும் எனவே எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம். பழைய சைக்கிள்கள், பழைய டிவி ரேடியோ, […]

திருவாரூர் தியாகராஜர் கோவில்… இது ஒரு கோயிலல்ல, கோடியான ஆன்மீகங்களை கொண்ட பெருஞ்சமூகம். பெரிய கோவில் என்றால் நம் அனைவருக்கும் நினைவிற்கும் வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் சைவ மரபு படி பெரிய கோவில் என்பது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலை மட்டுமே குறிக்கும்.சைவ மரபுப் படி கோவில் என்பது சிதம்பரத்தையும், இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் என்றும் சொல்லப்படுகிறது.  365 லிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், […]

புதிய வாகனம் வாங்கும் அனைவரும் பொதுவாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனை அடுத்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அதனை வாகன சக்கரத்தால் நசித்து வாகனம் ஓட்டுவர். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. ஒரு எலுமிச்சை தான் வீணாகும். முன்பெல்லாம் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்துவதால் அவற்றின் […]

இந்திய கலாச்சாரத்தில் வாஸ்து சாஸ்திரம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வீடு கட்டுதல், திசைகள் மற்றும் இருப்பிடம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வாழ்க்கை முறையில் நல்லிணக்கம் மற்றும் செழிப்பை வழங்கும் கொள்கைகளை இது வழங்குகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பணத்தை எங்கு வைத்திருக்கிறோம் என்பது நமது நிதி நிலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பணத்தை எங்கே சேமிப்பது? வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் பணத்தை சேமிப்பதற்கு மிகவும் […]

வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும். சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து […]

நமது கைகளிலும் சரி, கால்களிலும் சரி ஆபரணம் அணிவதற்கு என்றே சில வரைமுறைகள் நம் பெரியோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளன. கை, கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் ஆபரணம் அணிய வேண்டும் என சொல்லி உள்ளார்கள். கையில் மோதிரம் அணிவதாக இருந்தாலும், காலில் மெட்டி அணிவதாக இருந்தாலும் இரண்டாவது விரலை தான் சொல்லி உள்ளார்கள். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் […]