புதிய வாகனம் வாங்கும் அனைவரும் பொதுவாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனை அடுத்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அதனை வாகன சக்கரத்தால் நசித்து வாகனம் ஓட்டுவர். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. ஒரு எலுமிச்சை தான் வீணாகும். முன்பெல்லாம் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்துவதால் அவற்றின் […]
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
இந்திய கலாச்சாரத்தில் வாஸ்து சாஸ்திரம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வீடு கட்டுதல், திசைகள் மற்றும் இருப்பிடம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வாழ்க்கை முறையில் நல்லிணக்கம் மற்றும் செழிப்பை வழங்கும் கொள்கைகளை இது வழங்குகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பணத்தை எங்கு வைத்திருக்கிறோம் என்பது நமது நிதி நிலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பணத்தை எங்கே சேமிப்பது? வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் பணத்தை சேமிப்பதற்கு மிகவும் […]
வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும். சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து […]
நமது கைகளிலும் சரி, கால்களிலும் சரி ஆபரணம் அணிவதற்கு என்றே சில வரைமுறைகள் நம் பெரியோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளன. கை, கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் ஆபரணம் அணிய வேண்டும் என சொல்லி உள்ளார்கள். கையில் மோதிரம் அணிவதாக இருந்தாலும், காலில் மெட்டி அணிவதாக இருந்தாலும் இரண்டாவது விரலை தான் சொல்லி உள்ளார்கள். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் […]
சாமி கும்பிடும்போது சிலருக்குக் கொட்டாவி வருவதையும், கண்ணீர் வருவதையும் பார்த்திருப்போம். சில சமயங்களில் சாமி சிலையிலிருந்து பூ விழுவது, மணியோசை கேட்பது போன்ற விஷயங்களும் நடைபெறும். இதற்கான பலன்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம். கோயிலுக்குச் செல்வதற்கான முக்கியமான காரணம், நம் குறைகளை கடவுளிடம் சொல்லவும், நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறினால், அதற்கான பரிகாரத்தைச் செய்யவுமே செல்வோம். இன்னும் சிலர் மனநிம்மதி தேடி கோயிலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. அவ்வாறு கோயிலில் […]
ஒருமுறை குரு பிரகஸ்பதி இந்திரன் மீது கோபம் கொண்டார். இதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அரக்கர்கள் தேவலோகத்தைத் தாக்கினர். அப்போது இந்திரன் ராஜ்ஜியத்தை விட்டு ஓடி பிரம்மாவை அணுகினார். அப்போது பிரம்மா இந்திரனிடம் “உனக்கு இராஜ்ஜியம் கிடைக்க வேண்டுமென்றால் நீ ஒரு முனிவருக்கும் பணிவிடை செய்ய வேண்டும். அந்த முனிவர் மனம் மகிழ்ந்து போனால் உனக்கு உன் ராஜ்ஜியம் கிடைக்கும்” என்றார். அவரின் அறிவுரை படி ஒரு முனிவருக்கு இந்திரன் […]
அறுபடை முருகன் கோயில்களில் மூன்றாம் படை வீடு பழனி ஆகும். அங்கு முருகன் காலை மாலை என பல கோலங்களில் காட்சி தருகிறார். மேலும் அங்கு முருகனை ஆண்டி கோலத்தில் பார்த்து தரிசனம் செய்யும் பொழுது நாம் ஆண்டி ஆகி விடுவோம் என்று பொதுவான தவறான கருத்து நிலவி வருகிறது. அது உண்மைதானா என்பது பற்றி பார்ப்போம். போகர் சித்தர் பழனி தண்டாயுதபாணி சிலை வடிவமைக்கும் போதே அவர் ஆண்டிக் […]
ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை பகுதியில் உள்ள சுவாமிநாத சுவாமி கோவிலில், அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய விஸ்வரூபம் காணப்படும் ஒரே தலம் இதுவாகும். பொதுவாக முருகப்பெருமான் பெரும்பாலான தலங்களில் ஒற்றை முகத்துடன், சில இடங்களில் மட்டும் இரு அல்லது மூன்று முகங்களுடன் காட்சி தருவார். ஆனால் குண்டுக்கரையில், மிகவும் விசித்திரமாக, […]
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் இந்த கோயில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் முன் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து சென்றால், இடதுபுறத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு, கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசிக்கலாம். கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், […]
கருட புராணம் பல ரகசியங்களைச் சொல்கிறது. இறந்த பிறகு ஆன்மா எவ்வாறு பயணிக்கிறது, எங்கு செல்கிறது, மறுபிறப்பு எப்படி இருக்கிறது, சொர்க்கம் மற்றும் நரகம் என்றால் என்ன, மூதாதையர் செயல்களை எவ்வாறு செய்வது போன்ற விவரங்களை இது வழங்குகிறது. இறக்கவிருக்கும் ஒருவர் என்ன பார்க்கிறார் என்பதும் இதில் அடங்கும். தனது வாழ்க்கை முடிவுக்கு வரும் ஒருவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த அறிகுறிகளைப் பார்க்கிறார். யமதூதர்: கருட புராணத்தின் […]