மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் தமது நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை வந்த அவருக்கு, விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், பின்னர் கார் வாயிலாக ரமண […]

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு தடை விதித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோவில் தரிசனத்திற்கு வரும்போது, அவர்கள் வருகை தரும் நேரம் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பாக ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க […]

கிராமப்புறங்களில் முருங்கை மற்றும் வேப்ப மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகள் காரணமாக பலர் தங்கள் வீடுகளில் இருந்த முருங்கை மரங்களை வெட்டி அகற்றும் சூழல் உருவானது. குறிப்பாக, முருங்கை மரத்தில் பேய், பிசாசுகள் குடியிருக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் உச்சம் தொட்டு வரும் இக்காலகட்டத்திலும், பில்லி சூனியம் மற்றும் பேய் சார்ந்த […]

இந்து தர்மத்திலும், ஆன்மீக சாஸ்திரத்திலும் தினமும் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தரும் மிக முக்கியமான வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது. இருப்பினும், சாஸ்திர விதிகளின்படி சில குறிப்பிட்ட சூழல்களிலும் நாட்களிலும் வீடுகளில் தீபமேற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆன்மீக பெரியோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, உறவினர்கள் அல்லது பங்காளிகளின் குடும்பங்களில் இறப்பு சம்பவிக்கும் பட்சத்தில், அதற்கான இறுதி சடங்குகள் மற்றும் காரியங்கள் நிறைவடையும் வரை வீடுகளில் விளக்கேற்றி […]

வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருக வேண்டும் என்பதற்காகப் பெரும்பாலானோர் வீடுகளில் வாஸ்து சாஸ்திரத்தை மிக முக்கியமாக கருதுகின்றனர். இருப்பினும், சில வீடுகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் வாஸ்து குறைபாடுகள் ஏற்படுவது உண்டு. இத்தகைய வாஸ்து தோஷங்களின் எதிர்மறைத் தாக்கத்தைக் குறைத்து, வீட்டில் நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்க சில குறிப்பிட்ட ஆன்மீக மற்றும் அலங்காரச் சிலைகளை வைப்பது நல்ல தீர்வாக அமையும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டில் நிதி […]

வாஸ்து சாஸ்திரத்திற்கு எப்போதும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் எவ்வளவு சாதகமாக அமைந்திருந்தாலும், அவர் வசிக்கக்கூடிய இடம் அல்லது வீட்டின் அமைப்பு சரியாக இல்லை என்றால், வாழ்வில் பல்வேறு தடைகளையும் துன்பங்களையும் சந்திக்க நேரிடும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஒரு குடும்பத்தில் அமைதியும் மனநிம்மதியும் நிலவுவதற்கு, நாம் வாழும் இல்லமும் அதைச் சுற்றியுள்ள சூழலுமே முதன்மை காரணியாக அமைகின்றன. சுற்றிலும் எதிர்மறை ஆற்றல்கள் […]

நமது இல்லங்களில் பொருட்களை வைக்கும் விதம் மற்றும் அவற்றை பராமரிக்கும் முறையை பொறுத்தே வீட்டை சுற்றி நேர்மறை மற்றும் எதிர்மறை அதிர்வலைகள் உருவாகின்றன. குறிப்பாக, பணத்தையும் விலைமதிப்பற்ற பொருட்களையும் பாதுகாப்பாக வைக்கும் பீரோவை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வாஸ்து மற்றும் ஆன்மீக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், வீட்டில் செல்வம் தங்குவதற்கும் லட்சுமி கடாட்சம் பெருகவதற்கும் பீரோவில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து காண்போம். […]

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தனது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும், என்னென்ன திருப்புமுனைகள் நிகழும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே இருப்பது உண்டு. ஆனால், தோன்றும் நேரத்திலெல்லாம் ஜாதக கணிப்புகளைத் தேடிச் செல்வதை விட, அதற்கென ஜோதிட சாஸ்திரத்தில் வரையறுக்கப்பட்டுள்ள உரிய தருணங்களில் அணுகுவதே சரியான வழிகாட்டலாக அமையும். எப்போது பார்க்க வேண்டும்? ஜாதகம் என்பது ஒருவரின் வாழ்வியலுக்கான வழிகாட்டி மட்டுமே. வாழ்வின் முக்கியமான தருணங்களான திருமணம், புதிய […]

இந்துக் சமயத்தில் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பக்தியுடன் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, மன அமைதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆன்மிக அறிஞர்கள் கூறுவதன்படி, செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து, அருகிலுள்ள முருகன் அல்லது ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. வீட்டிலேயே வழிபடுபவர்கள், விளக்கேற்றி மனமுருகி பிரார்த்தனை செய்யலாம் […]

நவகிரகங்களில் சுப யோகத்தையும் மங்களத்தையும் வாரி வழங்கும் நாயகனாக திகழ்பவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரப்படி ஞானம், கல்வி, கூர்மையான அறிவு, தொழில் வளர்ச்சி, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கு முதன்மை காரணியாக இவர் விளங்குகிறார். இத்தகைய சிறப்புமிக்க குரு பகவான் கடந்த ஜூலை 14ஆம் தேதி கடக ராசியில் அஸ்தமனமாகி தனது பயணத்தை தொடர்ந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் உதயமாகவுள்ளார். குரு […]