ஜனவரி 5 ஆம் தேதியை தனது மறுபிறப்பு என இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் பயோவை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மாற்றியுள்ளார். இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்ரான ரிஷப் பந்த், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி பயங்கர கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் அவரது கார் தீப்பற்றி எரிந்த நிலையிலும் ரிஷப் பந்த் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இதன்பின் ரிஷப் பந்த், மும்பையின் கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு […]

உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியில் புதிதாக ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 3 இளம் வீரர்கள் இடம் பெறக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, இந்தியா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அயர்லாந்திற்கு எதிரான 3 […]

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விலை மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் 10 நகர மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் போட்டி தொடங்கி நவம்பர் 19இல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அக்டோபர் 5 இல் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து […]

சென்னை மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகள் நடைபெறுகின்றன. இதே மைதானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கடும் வெயிலில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதிலும் உள்ளது. இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் வெற்றி, […]

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. சென்னை, ஐதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் […]

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு 100 நாட்கள் இருக்கும் நிலையில், தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க போட்டியான அக்டோபர் 5ஆம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர […]

உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் நேற்றைய தினம் குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ப்ரண்டன் கிங்(76), சார்லஸ்(54), ஹோப்(47), நிக்கோலஸ் பூரன்(104), கீமோ […]

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து குவகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், WFI தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்தது.பிறகு இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் […]

13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா தவிர, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து […]

பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலாக போராடி வந்த மல்யுத்த வீரர் வீராங்கனைகள் திடீரென போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தப் போராட்டம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, முடிவுக்கு வந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னணி மல்யுத்த […]