இந்திய அணி வீரர்கள் அழுத்தம் கொடுப்பதாக, நடுவர் நிதின் மேனன் கூறியுள்ளார். இந்தியாவில் விளையாடும் போது, இந்தியா அணி வீரர்கள் நடுவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், அவர்கள் எப்போதும் போட்டியின் முடிவுகளை அவர்களுக்கு சாதகமாக பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால், நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், வீரர்களால் ஏற்படும் அழுத்தத்தை தவிர மற்ற எந்த சூழ்நிலையையும் கையாளும் அளவுக்கு நான் […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
இந்திய கிரிக்கெட் அணிக்கான முதன்மை ஸ்பான்சர் ஆக இருக்க, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து பிசிசிஐ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கான முதன்மை ஸ்பான்சர் ஆக இருக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அண்மையில் அறிவித்தது. அதேநேரம், அந்த பிரிவில் விண்ணப்பிக்க குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. அதன்படி, விளையாட்டு வீரர்களுக்கான ஆடை உற்பத்தியாளர், போதை பொருட்கள், பந்தயம், கிரிப்டோகரன்சி, பணத்தை வைத்து […]
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, டெஸ்ட் தொடரில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை வருகின்ற ஜூன் 27 ம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 […]
இங்கிலாந்து நாட்டில் ப்ரோம்ஸ்கிரோவ் கிளப் அணிக்காக ஆலிவர் ஒயிட்ஹவுஸ் என்ற 12 வயது வீரர் கிரிக்கெட் ஆடி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குக்ஹில் அணிக்கு எதிராக நடந்த 12 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் ஆலிவர் ஒயிட்ஹவுஸ் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஒரு அபாரமான சாதனையை நிகழ்த்தினார். ஆலிவர் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரட்டை ஹாட்ரிக் சாதனை படைத்தார். […]
அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டியில் அதிவேக கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது அதிவேக கோலை அடித்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது முதல் கோலை, போட்டி தொடங்கிய […]
உலக கிரிக்கெட் ரசிகர் பட்டாளமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் காயமடைந்த அவர், தனது உடல்நிலை குறித்த மற்றொரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். டிசம்பர் கடைசியில் அடிபட்ட அவர் இதுவரை ஏறக்குறைய 6 மாத கிரிக்கெட்டைத் தவறவிட்ட பிறகு, முழு உடற்தகுதியை நோக்கி பெரும் முன்னெடுப்புகளை எடுத்துள்ள ரிஷப் பந்த், இந்தியா நடத்த உள்ள 50 […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களும், இந்திய முன்னாள் வீரர்களும் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பேசுவதற்கு போட்டியின் முடிவுவரை காத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரிக்கி பாண்டிங், இந்திய அணி அஸ்வினை எடுத்துச்செல்லாமல் தவறிழைத்துவிட்டது என்று போட்டி தொடங்கும்போதே தெரிவித்திருந்தார். இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய போது, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற […]
2023 – 25ம் ஆண்டு வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசியின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 5 நாட்களாக நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து. இதில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமில்லாமல், ஐசிசியின் அனைத்து […]
2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை தொடரில் மீதம் 13 போட்டிகளில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றனர். இந்த […]
கிரிக்கெட் வீரர்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது கேவலமானது என்று கவுதம் கம்பிர் விமர்சித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் இது போன்று பான் மசாலா (புகையிலை) விளம்பரங்களில் நடிப்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது, இது கேவலமாக பார்க்கப்படுகிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், கவுதம் கம்பிர் விமர்சனம் செய்துள்ளார். கம்பிர் தனியார் செய்திக்கு அளித்த பேட்டியில் அவரிடம் கிரிக்கெட்டர்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது பற்றி கேட்கப்பட்டது. அப்போது […]