கத்தார் உலகக் கோப்பை தான் கடைசியாக விளையாடும் போட்டி என்று அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை பிபா உலக கோப்பை போட்டி நடைபெற்றது இதில் பிரான்ஸ் அனியை லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வென்றது. இதனையடுத்து, ஜூன் […]

சிறப்பு ஒலிம்பிக் கோடைக்காலப் போட்டியில் பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி ஜூன் 12 அன்று ஜெர்மனி தலைநகர் பெர்லின் புறப்பட்டது. இதற்காக ஜூன் 8 ம் தேதி  அன்று நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியில், இந்திய அணி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இதுவரை இல்லாத அளவாக இந்திய […]

தமிழ்நாடு கலாசாரபடி வேஷ்டி மட்டும் பட்டு சேலையுடன் தங்களது நிச்சயதார்த்தத்தை நடத்திய ருதுராஜ்-உட்கர்ஷா தம்பதினரின் நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிரம் பதிவு வைரலாகி வருகிறது. CSK தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அவருடைய நீண்டநாள் காதலியான உத்ராக்ஷாவினை ஜூன் 3ம் தேதி மாலை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து, அவரது திருமண நிகழ்வின் கியூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. தற்போது, தமிழ்நாட்டின் கலாசார உடையுடன் தனது நிச்சயதார்த்தத் நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை […]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் விளையாடுவதற்காக பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 4ஆவது சீசனானது வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தொடருக்காக இந்த வருடம் முதல்முறையாக வீரர்களுக்கான ஏலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக கிட்டத்தட்ட 500 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். முதல்முறையாக நடத்தப்படும் இந்த ஏலமானது ஜூன் 14ஆம் தேதியான […]

பாபர் அசாமிடமிருந்து, விராட் கோலி கற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன் கூறியுள்ளார். லண்டன் ஓவலில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தநிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன் இந்திய அணி இரண்டாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு […]

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அவரின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக விராட் கோலிக்கும், அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்துவந்தன. சொல்லாததை சொன்னதாக இருவரும் மாறி மாறி கூறிவந்தனர். விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் ரோகித் சர்மா இந்திய அணியின் முழு […]

சீனாவின் தலைநகரில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட சனிக்கிழமை அன்று சீனா வந்தார் மெஸ்ஸி. பெய்ஜிங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சோதனை பணியின் போது சீன காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மெஸ்ஸியிடம் சீன விசா இல்லாதநிலையில், அவர் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் ஸ்பெயின் பாஸ்போர்ட்டுடன் பயணித்ததால் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸியின் விசா வருவதற்கு தாமதமாகியதால், […]

ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் தோனி அதனை எளிதாக செய்து காட்டியுள்ளார்” என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 164/3 ரன்களுடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியதும் விக்கெட்கள் சீட்டுக்கட்டுகள் போல் […]

டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதங்கள் இந்திய அணியின் வெற்றியை பறித்தது எனவும் முதல் நாளிலேயே மோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது எனவும் பிசிசிஐ தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய மோசமான தோல்வியை சந்தித்தது. அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. […]

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் தனது லீக் ஆட்டங்களை ஐந்து மைதானங்களில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023-ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடரை இந்தியா முதல்முறையாக தனியாக நடத்த உள்ளது. சுமார் பத்து அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை தொடருக்கான […]