வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி, ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதனத்தில் கடந்த டிசம்பர் […]

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணி, 2-1 என்ற கோல்கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தி, மூன்றாம் இடம் பிடித்தது. 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் யார் சாம்பியன் என்பதை உறுதி செய்ய இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில், அரையிறுதியில் தோல்வியை தழுவிய குரோஷியா – மொராக்கோ அணிகள் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மோதின. இப்போட்டி, அல்ரயான் நகரில் உள்ள கலிஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. […]

தங்களது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று மிகப்பெரிய சலுகையை அயர்லாந்து அணி முன்வைத்தும், இந்தியாவிற்காக அனைத்தையும் உதறித்தள்ளியுள்ளார் சஞ்சு சாம்சன். கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், ஒவ்வொரு ஆண்டும் ஓரிரு தொடர்களில் எடுக்கப்பட்டு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் வெளியேற்றப்பட்டு விடுவார். இப்படியாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், இந்தாண்டு சில டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. […]

இந்திய அணி வீரர் மயங்க் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால். இவர் தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர். இவர் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர், பெங்களுருவில் பிசப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும், ஜெயின் பல்கலைக் கழகத்திலும் பயின்ற மாணவர் ஆவார். இவர் ஐபிஎல் தொடரில் […]

மொராக்கோ முதல் முறையாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. சனிக்கிழமை அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் படுத்திய மொராக்கோ, கடைசி நான்கு சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. 42-வது நிமிடத்தில் யூசுப் எல்-நெசிரி மூலம் மீண்டு […]

இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் கேட்ச் பிடிக்கச் சென்று, 4 பற்களை இழந்ததுடன் ரத்தம் சொட்ட சொட்ட சமிகா கருணாரத்னே வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல உள்ளூர் போட்டியான ஐபிஎல் டி20 தொடர் போன்று, இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. விளையாட்டு போட்டி தான் என்றாலும், காயங்கள் ஏற்படுவது சகஜம். ஆனால், லங்கா […]

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்றுகளும், நாக்-அவுட் சுற்றுகளும் நடந்து முடிந்துள்ளன. 16 அணிகள் களமிறங்கிய நாக்-அவுட் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று, பிரேசில், குரோஷியா, நெதர்லாந்து, அர்ஜென்டினா, மொராக்கோ, போர்ச்சுக்கல், இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய 8 அணிகள் […]

கிரிக்கெட் வீரர் ஆகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை எப்போதும் தனக்கு ஏராளமான அன்பையும் ஆதரவையும் அளித்திருக்கிறது. […]

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா, சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். குஜராத் சட்டசபை தற்போது பாஜக வசமாக மீண்டும் மாறியுள்ளது. தொடர்ந்து 7-வது முறையாக பிரமாண்ட வெற்றியை பாஜக பெற்றுவருகிறது. தற்போது ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும் உறுதியாகி வருகிறது. அந்த வகையில், ஜாம்நகர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா […]

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்றுள்ளது. 3 ஒருநாள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-பங்களாதேஷ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய […]