சென்னை ஐக்கோர்ட்டின் 16 சிவில் நீதிபதி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அல்லது கீழமை நீதிமன்றங்களில் தற்போது வழக்காடும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; இரண்டாவதாக உயர்நீதிமன்றத்தில் அல்லது கீழமை நீதிமன்றங்களிலேயே குறைந்தது 3 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும். சட்ட மாணவர்களாக இருந்தால் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சட்டக்கல்வி நிறுவனங்களில் […]

உத்தரப்பிரதேசத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவரது வங்கி கணக்கில் ரூ.172 கோடி இருந்ததாக வருமானவரித்துறை கண்டுபிடித்தது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய் ராஸ்தோகி. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தினசரி ஒரு சில நூறு ரூபாய்களுக்கு மட்டுமே லாபம் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காய்கறி வியாபாரி விஜய் ராஸ்தோகி வங்கி கணக்கில் 172 கோடி இருப்பு வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. […]

இரவு நேர பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளத்து. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில், 10 மணிக்கு மேல் எந்த ஒரு பயணியும் […]

பெண் தொழிலதிபர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய பெண் தொழிலதிபர்களில் டாப் 10 பட்டியலைத் தொகுப்பில் பார்க்கலாம். பெண்களுக்கு எதிராக சமுதாயத்தில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு மத்தியில், உலகளவில் பெண் தொழிலதிபர்கள் அதிகரித்து வருகின்றனர். அதாவது, அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச துவங்கியிருக்கின்றனர். கார் ஓட்டுவது முதல் வானுார்தி இயக்குவது வரை, பெண்களின் வளர்ச்சி என்பது, வியக்கத்தக்கது. இல்லத்தரசிகளாய் குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை, தொழிலாளியாக, பணியாளராக, […]

வட அமெரிக்க நாடான கனடா நாட்டில் செயல்பட்டு வரும் பாலியல் குழுக்களிடம் தங்களின் குழந்தைகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கனடாவைச் சார்ந்த சமூக ஆர்வலர் மிச்செல் பியூர்கியூலே. கனடா நாட்டைச் சார்ந்தவரான இந்த சமூக ஆர்வலர் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கொடுமையான அனுபவங்களை பகிர்ந்து இது போன்ற அனுபவங்கள் உங்களது பிள்ளைகளுக்கும் நிகழாமல் இருக்க அவர்களை கண்காணித்து வாருங்கள் என […]

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிய நிலையில், இம்மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்பி தேர்வு எழுதி அரசு வேலைகளை பெற தமிழகம் முழுவதும் பட்டதாரிகள் தயாராக உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் செயல்பாடு சமீபகாலமாக அதிருப்தியை […]

பாரதி ஏர்டெல் நிறுவனம், 125 நகரங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் ஏற்கனவே ஏர்டெல் 5ஜி இருந்தது. தற்போது கூடுதலாக சேலம், வேலூர், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையானது இப்போது மொத்தம் 265 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை எப்படி […]

கோடை நெருங்கினாலே அனல் எங்கு சென்றாலும் துரத்தும். நிழல், தண்ணீர் இது மட்டுமே நம் இளைப்பாறலாக மாறும். இப்படிப்பட்ட சூழலில் குளுகுளு வென ஏசி அறையே கிடைத்தால் எப்படி இருக்கும்..? அது சொர்க்கத்தை காட்டிலும் மேலாக தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு அது வாய்க்கும்..? ஆனாலும் கவலையில்லை. கிடைக்கும் ஃபேன் காற்றை வைத்துக்கொண்டே குளுகுளு ஏசி உணர்வை பெறலாம். அதற்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும். ஜன்னல்கள்: கோடை […]

குளிர்காலத்தில் கூட ஏசி போட்டு போர்வையை நன்றாக போர்த்தி தூங்கும் பழக்கத்திற்கு பெரும்பாலானோர் ஆளாகிவிட்டனர். கோடைக்காலமும் நெருங்குகிறது. ஏசியால் கிடைக்கும் சொகுசைவிட அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். ஒரு அறையை குளிரூட்டுவதற்காக அங்குள்ள மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சுகிறது. ஏசி அரை முழுவதும் சில்லென்று நிம்மதியான உணர்வை கொடுத்தாலும் நம் உடலில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால் இயல்பாகவே நமது உடல் டிஹைரேட் ஆகி நாளடைவில் பல்வேறு உடல் பாதைகளுக்கு […]

கூகுள் பே (Gpay) மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும், யுபிஐ மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தப்படுகிறது. இது பயன்படுத்துவதற்கு வசதியாகவும் சில வினாடிகளில் […]