ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ‘இலவச தையல் இயந்திரம்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.1.35 கோடி செலவில், 2,250 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மாவட்ட சமூக நல […]

புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சியர் மா.செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரங்கள்: தட்டச்சர் 6 நூலகர் 1 கூர்க்கா 2 அலுவலக உதவியாளர் 65 உபகோவில் பல வேலை 26 சமையல் உதவியாளர் 2 ஆயா பணி 3 பூஜை காவல் 10 காவல் 9 பாத்திர சுத்தி 50 கல்வித்தகுதி: மேற்காணும் பணியிடங்களில், பெரும்பாலான பதவிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியும், […]

மரியன் பயோடெக் நிறுவனத்தின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு இருமல் சிரப் வழிவகுத்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான மரியன் பயோடெக் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருமல் மருந்தில் சோதனைக்கு எடுக்கப்பட்ட 36 மாதிரிகளில் 22 பேர் எத்திலீன் கிளைகோல் மூலம் கலப்படம் செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து […]

உலகில் பல விநோதமான வகையில் உருவாக்கப்பட்டுள்ள சில நவீன ஹோட்டல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம். உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழும் மாலத் தீவில் தி முராக்கா என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இயங்கும் ஓட்டல்களில் பிரபலமான இந்த ஹோட்டலில், படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, உடற்பயிற்சி கூடம், மசாஜ் சென்டர் என தனிதனியாக வசதிகள் உள்ளன. இங்கு தங்கும் […]

மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரையை முழுமையாக நிறைவு செய்து, தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து வருகிற […]

அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவோருக்கு ரத்ததில் யூரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரித்து பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதிகளவில் யூரிக் அமிலம் உருவாவதை தூண்டும் என்று கூறப்படுகிறது. இந்த யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும். அதிகப்படியான யூரிக் அமிலம் சுரப்பதை […]

அயர்லாந்தின் கடலுக்கு நடுவே அமைந்துள்ள தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பாலியல் உறவு முறைகளில் வித்தியாசமாகவும், விசித்திரமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வருவது ஆச்சரியத்தையும் சுவாரஸியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டில் கடலுக்கு நடுவே பல தீவுகள் அமைந்துள்ளன. இதில், ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தீவுகளிலும் வசித்து வரும் மக்களிடையே பழக்க வழக்கங்களில் வேறுபாடு உள்ளது. அந்தவகையில், அங்குள்ள தீவுகளில் ஒன்றான இன்னிஸ் பெக் என்ற தீவில் 350க்கும் […]

ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி உறுதியளித்துள்ளார். ஆந்திராவில் உள்ள தொழில்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் இன்ஜீனியரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் தொடக்கவிழாவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் […]

உலகளவில் வாகன நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதலிடத்தில் லண்டனும், பெங்களூரு 2வது இடத்திலும் உள்ளது. உலக அளவில் வாகன நெரிசல் உள்ள நகரங்கள் குறித்து டாம் டாம் என்ற ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆவதையடுத்து பெங்களூரு மத்திய பகுதி 2வது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தலைநகர் […]