சென்னையில் அதிகமாக காய்ச்சல் பரவிவரும் நிலையில், 50% பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா – ஏ வகை வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பரவலாக காய்ச்சல், இருமல் என்பது பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றன. தொடந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் பரவி வந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இது குறித்து ஆய்வு ஒன்றை பொதுசுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி, […]

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி வருகின்றன. அதில் பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும். அதாவது, பொதுவாக சீனியர் சிட்டிசன்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்கின்றார்கள். இது அவர்களுக்கு தேவையான பண புழக்கத்தை வழங்குகிறது. மேலும் வட்டி வருமானத்தை அவ்வபோது உறுதி செய்கிறது. இது தவிர இந்த சேமிப்பு அவர்களுக்கு ஏதேனும் […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நிதியாளர் பதவிகளுக்கான 5 காலிப்பணியிடங்களுக்கு 11.11.2022இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 10ஆம் தேதி வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்வானது மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், கணினி வழி தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக […]

போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை (அ) சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது ஒரு வழி எனில், அஞ்சல் அலுவலக சேமிப்பு வாயிலாக பணத்தை முதலீடு செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். போஸ்ட் ஆபீஸில் தொடர்வைப்பு கணக்கை எந்த வயது வந்தோரும் (அ) 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் துவங்கலாம். இந்தியா போஸ்ட் இணையதளத்தின் படி மாதாந்திர குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக ரூ.100 […]

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் மக்களுக்கு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர் விலையானது எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக படிப்படியாக உயர தொடங்கியது. வீட்டு […]

தமிழ்நாட்டில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்பை பெறுவதற்கு நம்ம பள்ளி என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 37,558 அரசுப் பள்ளிகளின் தேவைகள் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படுகிறது. […]

டிசம்பர்‌-2022 மற்றும்‌ ஜனவரி-2023 சந்தா தொகையானது இறுதி செய்யப்பட்டு, அதில்‌ ஏற்கனவே உள்ளூர்‌ கேபிள்‌ டிவி ஆபரேட்டர்களால்‌ செலுத்திய தொகை போக, மீதத்‌ தொகை மட்டுமே செலுத்த வேண்டும்‌. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ SMS சர்வர்கள்‌ டிசம்பர்‌-2022, ஜனவரி-2023 மற்றும்‌ பிப்ரவரி-2023 முன்பாதி வரை தொழில்நுட்ப காரணங்களால்‌ இயக்கம்‌ தடைபட்டிருந்தது SMS சர்வர்கள்‌ […]

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை மூலம்‌ செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டு வரும்‌ வேலைவாய்ப்பில்‌ மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின்‌ அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப்‌ பணிகள்‌ வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில்‌ ஓர்‌ முன்னோடி முயற்சியாகும்‌. இது குறித்து விரிவான அறிவுரைகள்‌ அனைத்து […]

உயர அளவு வித்தியாசத்தில் இருக்கும் ஒரே நேரத்தில் பிறந்த இரட்டையர்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் ஒகாயாமாவை சேர்ந்த யோச்சி மற்றும் மிச்சி கிகுச்சி என்ற இரட்டை சகோதரிகள். இருவருக்கும் தற்போது 33 வயது ஆகிறது. யோச்சி என்றவர் 162.5 செ.மீ (5.4 அடி) உயரமும், மிச்சி என்றவர் 87.5 செ.மீ (2.10 அடி) உயரமும் கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் பிறந்த […]