இந்த உலகில் பல நாடுகளில் பல விசித்திரமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.. அந்த வகையில் இந்த நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது குற்றமாகும்.. அதற்காக முறையான சட்டமும் அங்கு இயற்றப்பட்டுள்ளது.. அதன்படி மனைவியின் பிறந்தநாளை மறக்கும் காணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம்.. சமோவா என்ற தீவு நாட்டில் இந்த விசித்திர சட்டம் பின்பற்றப்படுகிறது.. உலகின் அழகான தீவுகளில் சமோவாவும் ஒன்று.. அங்குள்ள விசித்திரமான சட்டங்கள் காரணமாக, அந்த […]

இந்தியாவில் 16 பெண்களில் ஒருவருக்கும், 25 ஆண்களில் ஒருவருக்கும் உடல் பருமன் பிரச்சனை இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது . இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தேசிய குடும்ப நல ஆய்வில், ஒரு நபரின் உடல் நிறை குறியீட்டெண் ((BMI) அடிப்படையில் தான். அதாவது ஒரு நபர் 30க்கு மேல் BMI என்று சொல்லப்படக்கூடிய உடல் நிறை குறியீட்டெண் பெற்றிருந்தால், அவர் உடல் பருமனான நபராக கருதப்படுவார். இந்த விஷயத்தில் பிராந்திய வேறுபாடுகளும் BMI […]

அயர்லாந்தில் 30 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது உடல் எடையை குறைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, பீட்சா உலக உணவாக அவதாரம் எடுத்தது. ஆரம்பகாலத்தில் தட்டையான ரொட்டிகளில் காய்கறிகள் மற்றும் […]

பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில், நண்பன் பட பாணியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் அழைப்பு மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவர்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முகாஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மாண்டியன், கேரனைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வலியால் அவதிபட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அப் பெண் அழைத்து செல்லப்பட்டார். […]

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 9 வயது சிறுவன், தான் சேகரித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை நன்கொடையாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் […]

ஜம்மு காஷ்மீரில் பனிக்கட்டிகளின் மீது வெறும் காலில் நின்றபடி இளம் பெண்கள் தற்காப்பு கலை பயிற்சிகள் செய்து அசத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குளிர்காலம் தொடங்கி விட்டாலே குளிர்ச்சியான சூழ்நிலையை சமாளிப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்வார்கள். நம் நாட்டில் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவே உடலை நடுங்க வைத்துவிடும். மேலும் காஷ்மீரின் சில இடங்களில் பனி போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கும். குளிர்ச்சி குடிகொண்டிருக்கும் […]

2.8 மணிநேரம் செலவிடும் ஆண்களுடன் ஒப்பிடும்போது, 7.2 மணிநேரம் சம்பளம் இல்லாமல் பெண்கள் வீட்டு வேலை செய்கிறார்கள் என்று IIMA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது இதுதொடர்பாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) நேர பயன்பாட்டுக் கணக்கெடுப்பின் (TUS) அடிப்படையிலான ஆராய்ச்சியில், துப்புரவு, சமைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற அடிப்படை வீட்டுத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதை விட, ஊதியம் பெறும் பெண்கள் ஊதியமில்லாத வீட்டு வேலைகளில் இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுகிறார்கள் […]

உடல், சருமம், கேசம் உள்ளிட்டவைகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியளிக்கும் அற்புத பானம் தேங்காய்ப்பால் ஆகும்.. இதில் அடங்கியுள்ள நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். தேங்காயை பொருத்தவரை அதன் மரத்தின் வேர் முதல் தேங்காய் தொட்டிவரை அனைத்து வகையிலும் மக்களுக்கு பயன்படுகிறது. இந்த தேங்காயில் எண்ணிலடங்காத நன்மைகள் அடங்கியுள்ளன. அதன்படி, தேங்காய்ப் பாலிலும், வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ் […]

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்குமாறு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த ஆண்டும் இதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால், கல்வியாண்டின் இடையில் பணியிட மாறுதலை மேற்கொள்ளக்கூடாது என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், அரசு நிதி உதவி […]

காதலர் வாரத்தின் 6-வது நாளான இன்று ‘Hug Day’ கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக ‘ஹக் டே’ (Hug Day) கொண்டாடப்படுகிறது. இன்று அன்பு, அக்கறை மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் நாளாகும். அரவணைப்பு நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஒருவருக்கு உங்கள் அன்பையும் பாராட்டையும் காட்ட இது ஒரு சிறந்த வழியாகும். எனவே, உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் அன்பை வெளிப்படுத்த விரும்பினால், அவர்களை அணைத்துக்கொள்ள இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். […]