அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேபால்(PayPal), இந்தியாவின் UPI-ஐயுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியர்கள் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வதற்கு யுபிஐ-யை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம். இந்தியாவில்,மளிகை, உள்ளிட்ட பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவது போல, எல்லைகளைக் கடந்து வெளிநாட்டிலும் இதை செயல்படுத்தும் நோக்கத்தில், உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான PayPal, நேற்று புதன்கிழமை, “PayPal World” எனும் உலகளாவிய பண பரிமாற்ற தளத்தை அறிமுகம் செய்தது. […]

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கும், அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் இது சக்தி வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த நாளில் தர்ப்பணம் மற்றும் பிற சடங்குகளைச் செய்வதன் மூலம், முன்னோர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று, வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வது சிறப்பானது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, […]

இன்றைய காலகட்டத்தில் , உலகம் முழுவதும் புற்றுநோய் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று நமது உணவு முறை. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் உலகெங்கிலும் புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு பல காரணங்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மரபணுக்கள், உணவுமுறை, வாழ்க்கை முறை மற்றும் கெட்ட பழக்கங்கள் இந்த தொற்றுநோய் பரவுவதற்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படலாம். […]

2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஏழை, பணக்கார மாநிலங்கள் அடங்கிய பட்டியலை மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை (NSDP) கோவா மாநிலம், ரூ.3.57 லட்சமாகப் பதிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் பீகார் ரூ.32,227 உடன் கடைசி இடத்தில் உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன. […]

இந்தியா பல்வேறு மரபுகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் நிலமாக உள்ளது.. ஆனால் சில மர்மமான கிராமங்களும் இந்தியாவில் உள்ளன.. இந்தியாவின் சில கிராமங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், பில்லி, சூனியம், செய்வினை பற்றிய கதைகளால் சூழப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு கிராமம் தான் அசாமில் உள்ள மாயோங் என்ற கிராம்… இந்த கிராமம் “இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.. பல நூற்றாண்டுகளாக, மாயோங் கிராமம் அமானுஷ்ய நடைமுறைகள் மற்றும் […]

பொதுமக்களின் ரயில் பயணத்தை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே சமீபத்தில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுகள், காத்திருப்பு டிக்கெட்டுகள், முன்பதிவு கட்டணங்கள், தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்திய ரயில்வே ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பின் கீழ் ரயில் டிக்கெட்டின் கட்டணத்தை EMI மூலம் தவணைகளில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ரயில் டிக்கெட்டுகளை […]

மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் […]

60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலின் விவரம்: நாடு முழுவதும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள், பணியாளர்களின் நலன்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட 60 […]

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர 8 உயர் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியார் […]

ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் சில குணாதிசயங்கள் உள்ளன. குறிப்பாக, ஒருவரின் இயல்பை ஜோதிடத்தின் அடிப்படையிலும் அறியலாம். சில ராசிக்காரர்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், மற்றவர்கள் புத்திசாலித்தனம் மற்றும் தந்திரத்திற்கு பெயர் பெற்றவர்கள். மேலும்.. சில பெண்கள் நரிகளைப் போல தந்திரமாகவும் புத்திசாலியாகவும் செயல்படுகிறார்கள். அதாவது.. இந்த ராசிக்காரர்கள் யாராலும் ஏமாற்றப்பட மாட்டார்கள். ஆனால், மற்றவர்களை மிக எளிதாக ஏமாற்ற முடியும். எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.. விருச்சிகம் […]