இந்த உலகில் தூக்கத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது.. நாள் முழுவதும் உழைத்துவிட்டு, நிம்மதியாக தூங்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.. ஆரோக்கியமாக வாழ்வதற்கு போதுமான தூக்கம் என்பது அவசியம்.. உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் தூக்கம் உதவுகிறது. எனவே ஒரு சராசரி மனிதனுக்கு 6-8 மணிநேர தூக்கம் தேவை.. நல்ல தூக்கம் இல்லை என்றால் சுறுசுறுப்பாக வேலை செய்வது கடினமாகிவிடும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், 61 […]

மிக வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் வெள்ளத்தால், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பெரு நாடுகளில் ஒன்றரை கோடி மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றங்களால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில் தற்போது, அதிகரித்து வரும் புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன. இதனால், கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கும், […]

உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை சேர்ந்த சிறுமி, 8ம் வகுப்பு படிக்கும் அதி புத்திசாலி மாணவர்களின் புத்திக்கூர்மையில், 90 சதவீதத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினியர் நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் நடாஷா பெரியநாயகத்தின் வயது 13. இவரது பெற்றோர்கள் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். வகுப்பில் திறமையான மாணவியாக திகழும் நடாஷா 2021 இல் ஜான்ஸ் […]

தமிழகம் முழுவதும் இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான சிறப்பு குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி- 2023 மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமையான இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ குறைதீர்‌ முகாமில்‌ பொதுமக்கள்‌ தங்களது குறைகளை வட்ட […]

இந்தியாவில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிம படிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. எரிபொருள் தேவை, கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதையடுத்து பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் பெரும்பாலான நாடுகள் ஈடுபட்டுள்ளன. மின்சார வாகனங்களுக்கு மிக மிக முக்கியமானது என்றால் அது பேட்டரிக்கள் தான். அந்த பேட்டரிகளை தயாரிப்பதற்கு மூலக்கூறாக முக்கிய பங்கு வகிப்பது இந்த லித்தியம் கனிமம். […]

18 வயது நிறைவடையாத குழந்தை/ வளரிளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவோருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்‌ பிப்ரவரி-09ம்‌ தேதியன்று கொத்தடிமைத்‌ தொழிலாளர்‌ முறை ஒழிப்பு தினம்‌ அணுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும்‌ கொத்தடிமைத்‌ தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுத்து […]

இந்தியாவில் தெருவோர சிறு வியாபாரிகளும் கடன் பெற இயலும் வகையில் இந்த ஆண்டு டிஜிட்டல் கிரெடிட் சேவையை அறிமுகப்படுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. யுபிஐ முறையை சர்வதேச பணப் பரிவர்த்தனை முறையாக மாற்றும் முயற்சியில் என்சிபிஐ இறங்கியுள்ளது. இந்தநிலையில், இதுதொடர்பாக டிஜிட்டல் பேமென்ட்ஸ் உத்சவ் என்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், யுபிஐ சேவை போலவே இந்தியாவில் “டிஜிட்டல் கிரெடிட் சேவையும் அறிமுகப்படுத்தப்படும் […]

எச்சில் பற்களை பாதுகாக்கிறது, பேசுவதை எளிதாக்குகிறது, உணவுகள் வாய்க்குள் எளிதாக செல்லும் சூழலை ஏற்படுத்துகிறது மற்றும் எச்சில் என்பது நாம் உண்ணும் உணவை ஈரப்பதம் ஆக்குவதற்கு உதவும் ஒரு சலிப்பூட்டும் பொருள் என்று தான் நமக்கு தெரியும். ஆனால், உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எச்சில் ஒரு மத்தியஸ்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், உணவு எவ்வாறு வாய் வழியாக நகர்கிறது, அது நம் உணர்வுகளை […]

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளுக்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, இடிந்து விழுந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இடங்களில் உயிருடன் அல்லது சடலமாக மீட்கப்படுபவர்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகிவருகிறது. அந்தவகையில், சிரியாவின் ஜிண்டேரிஸ் […]

வயிற்று புற்றுநோய் பெண்களைவிட ஆண்களை அதிகளவில் பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை புற்றுநோய் எப்படி ஏற்படுகின்றன, சிகிச்சை முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடியநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்களால்தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் […]