தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், […]

வெளிநாட்டு நாணய வைப்புகளில் பணத்தை வைப்பதைத் தடுக்கும் நோக்கில், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான விதிகளை கடுமையாக்க ரிசர்வ் வங்கி (RBI) தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Liberalised Remittance Scheme (LRS) என்ற திட்டத்தின் கீழ் ஆண்டின் முடிவில் ஏற்படும் அதிகளவான வெளிநாட்டு நாணய அனுப்புதல்களை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டு நாணயத்தில் லாக்-இன் காலத்துடன் கூடிய […]

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசின் 37 வகையான துறைகளில் மொத்தம் 14,582 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் விவரம்: உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, ஐபி உள்ளிட்ட துறைகளில் அஸ்சிஸ்டண்ட் செக்‌ஷன் ஆபீசர்( குரூப் பி) , வரித்துறையில், குரூப் சி பணியிடங்கள் என 37 வகையான பணியிடங்களில் மொத்தம் 14,582 காலிப் […]

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தின் மேகனி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் தகவல்கள் தற்போது வெளியாகவில்லை. ஒரு விமானம் விபத்துக்குள்ளானவுடன், பயணிகளை மீட்பதற்கு முன் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டி தான். ஒரு விமானம் எங்கும் விபத்துக்குள்ளானால், முதலில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படும். இதற்காக, அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. விமான விபத்து நடந்த […]

ஏசியுடன் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் என்னாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இப்போது பல வீடுகளில் ஏசி அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்னும் பல மக்களுக்கு ஏசியை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதில் குழப்பங்கள் இருக்கிறது. எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவாக குழப்பங்களில் ஒன்று, AC பயன்படுத்தும் பொழுது அந்த அறையில் உள்ள சீலிங் ஃபேனை பயன்படுத்தலாமா? அல்லது பயன்படுத்தக் கூடாதா என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு குழப்பமாக இருக்கிறது. […]

பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென வங்கிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் […]

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் பணக்காரர்களைப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது. உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது அது உலகின் நான்காவது நாடாக மாறியுள்ளது, அங்கு அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள், அதாவது பணக்கார செல்வந்தர்கள் அதிகம் வசிக்கின்றனர். நைட் ஃபிராங்க் குளோபல் வெல்த் ரிப்போர்ட் 2025 இன் படி, இந்தியாவில் 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 85,698 […]