வெளிநாட்டு பயணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கவில்லை என உறுதிமொழி படிவத்தை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கவில்லை என உறுதிமொழி படிவத்தை பயணிகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி மத்திய, மாநில அரசு வழங்கும் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதேபோல ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு 20 கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப்படும் பொழுது […]
விவசாயிகளுக்கு 13-வது தவணை எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், […]
இந்திய தர நிர்ணய அமைவன தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி பி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஐ எஸ் ஐ முத்திரைகளை குடிநீர் பாட்டில்களில் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன்படி 12000 (1 லி, 2 லி, 500 மில்லி, 300 மில்லி) குடிநீர் பாட்டில்கள் மற்றும் 4 அட்டைப் பெட்டிகளில் ஐஎஸ்ஐ முத்திரை வில்லைகள் […]
நம் வீட்டில் எவ்வளவோ முறை கரண்ட் பிளக் குத்தி இருப்போம். ஆனால், ஒருமுறை கூட இதனை கவனித்து இருக்க மாட்டோம். ஏன் இப்படி இருக்குன்னு சின்ன யோசனை கூட வந்திருக்காது. 3 Pin Top எனப்படும் அடாப்டரில் 3 கம்பிகள் இருக்கும். அதில், ஒன்று லூசாக இருந்தால், அதனை, டெஸ்டர் கொண்டு டைட் வைக்க அந்த கீறல்களை பயன்படுத்தியிருப்போம். இந்த மாதிரி லூஸ் ஆச்சுன்னா, டைட் வைக்கத்தான் பிளவு மாதிரி […]
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண்களை கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;:2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு […]
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் […]
ரயில் பயணத்தின் போது ஒருவேளை விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்படும் பயணிக்கு ரூ.10 லட்சம் அரசின் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்… விமானத்தில் நாம் பயண டிக்கெட் எடுக்கும் போது, டிக்கெட் சார்ஜ், வரி உள்ளிட்டவைகளோடு டிராவல் இன்சூரன்ஸ் என்ற கட்டணமும் வசூலிக்கப் படுகிறது. அதுபோல் இந்திய ரயில்வே துறையிலும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, ரயில்வே டிராவல் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் […]
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான TATA குழுமம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டி.சி.எஸ். (TCS) என்ற மென்பொருள் நிறுவனமும் அடங்கும். இந்தியாவில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், விழா காலத்தை முன்னிட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் […]
பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் […]