வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளின் தொல்லை என்பது பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாகும். இவை உணவுப் பொருட்களையும், சமையலறையையும் அசுத்தப்படுத்துவதோடு, சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கின்றன. சந்தையில் கிடைக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. ஆனால், இப்போது நாம் பார்க்கப்போகும் எளிய தீர்வு, உங்கள் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதற்குத் தேவைப்படுவது பச்சை மிளகாயின் காம்புகள் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் மட்டுமே. முதலில், பச்சை மிளகாயின் காம்புகளை […]

இந்த நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சில பெற்றோர்கள் தக்கள் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலேயே ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட் போன்கள் மூலம் அதிக தகவல்களை அவர்கள் தெரிந்துக்கொள்வதாகவும் நினைக்கின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் செல்போன் பார்ப்பது சுமார் 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த […]

வியர்வை பொதுவானது. கோடைக்காலங்களில் உடலில் வரும் வியர்வை உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக்க செய்கிறது என்பதை அறிவோம். ஆனால் அதீத வியர்வை என்பது ஹைப்பர் அஹிட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது அக்குள் மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் வியர்வையை உண்டு செய்யும். அக்குள் வியர்வை என்பது அதிக அசெளகரியத்தை உண்டு செய்யலாம். அது தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும் அதனுடன் வெளிவரும் துர்நாற்றம் மோசமானதாக இருக்கும் நிலையில் அக்குள் வியர்வை தவிர்ப்பதே நல்லது. […]

வீட்டிற்கு வாங்கி வரும் மல்லிகைப் பூக்களை ஃபிரிட்ஜ் இல்லாமல் எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மலர்களிலேயே மல்லிகையின் வாசம் தனித்துவமானது. அதேபோல், பெண்கள் பலருக்கும் பிடித்த பூ என்றால், அது மல்லிகை தான். ஏன், சில ஆண்களுக்கும் கூட மல்லிகைப்பூ என்றால் பிடிக்கும். வீட்டுக்கு மல்லிகைப் பூ வாங்கி வந்தால், அதை பலரும் ஃபிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால், அப்படி வைக்கும்போது, அதிகப்படியான கூலிங்கால், […]

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 6ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இதைத்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கிறோம். இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டியும் உயரும், கட்ட வேண்டிய தொகையும் உயரும். இந்தாண்டில் […]

வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், என்ன மாதிரியான பாதிப்புகள் வரக்கூடும் என்பதை டாக்டர் வித்யா விளக்கியுள்ளார். வயாகரா மாத்திரை என்பது தசைகளை தளர்த்தி, ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை பெரிதாக்கி, அதற்குள் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஆண் பாலியல் ரீதியாக உற்சாகமாக உணரும்போது இந்த விளைவு 4 மணி நேரம் வரை நீடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்தவொரு செயற்கையான மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால், அது பக்கவிளைவுகளை […]

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் இந்த கோயில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் முன் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து சென்றால், இடதுபுறத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு, கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசிக்கலாம். கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், […]

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 50 பிரதம சங்கங்களின் மூலம் நாள்தோறும் 8,500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆவினில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : ஆவின் பணியின் பெயர் : கால்நடை உதவி மருத்துவர் பணியிடம் […]

மெக்சிகோ நாட்டில் உள்ள ‘டில்டெபாக்’ (Tiltepec) என்ற ஒரு சிறிய கிராமம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், இக்கிராமத்தில் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை யார்க்கும் பார்வை இல்லை என்பதே! இது ஒரு மர்மமான கிராமம், இங்கிருக்கும் ஒருவருக்கும் பார்வை இல்லை என்பதால், இது பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அனைவரும் முழுமையாக பார்வையிழந்தவர்கள். புதிய குழந்தைகள் பிறக்கும் போது கண்கள் இயல்பாக இருக்கும், […]

தொழில் முனைவோர்களாக விரும்பும் பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்குமே தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான கடனுதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில், புதிய குழுக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழு சார்பில், குழுக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் மொத்தமாக 6%ஆக […]