ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலம் வந்தவுடன், கொசுக்களின் அச்சுறுத்தல் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். தேசிய தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. உலக அளவில் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகெங்கிலும் சுமார் ஐந்து பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். […]

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இன்று இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 11 தாய்லாந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். இதனால் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன. கம்போடியா தாய்லாந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை ஏவிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாய்லாந்து கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.. தாய்லாந்தில் […]

50 பயணிகளுடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் சீன எல்லைக்கு அருகில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கில் சுமார் 50 பேருடன் ஒரு பயணிகள் விமானம் காணாமல் போனது. காணாமல் போன விமானம் An-24 பயணிகள் விமானம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.. அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், சீனாவின் எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகரத்தை […]

இத்தாலியின் பிரெசியா பகுதியில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இந்த பயங்கர விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு இத்தாலியின் பிரெசியா அருகே உள்ள A21 கோர்டமோல்-ஆஸ்பிடேல் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் இரு பயணிகளும் உயிரிழந்தனர் மற்றும் சாலையில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர். ரிபப்ளிக் வேர்ல்டின் கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட […]

தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல ஆண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை. ஆனால் தற்போது, ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, YCT-529 அதன் முதல் மனித பாதுகாப்பு சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. YCT-529 என்றால் என்ன, அது ஆண் உடலில் எவ்வாறு செயல்படுகிறது? எந்த ஹார்மோன்களும் இல்லாத கருத்தடை மாத்திரையான YCT-529, ஏற்கனவே விலங்கு பரிசோதனையில் நேர்மறையான […]

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேபால்(PayPal), இந்தியாவின் UPI-ஐயுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியர்கள் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வதற்கு யுபிஐ-யை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம். இந்தியாவில்,மளிகை, உள்ளிட்ட பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவது போல, எல்லைகளைக் கடந்து வெளிநாட்டிலும் இதை செயல்படுத்தும் நோக்கத்தில், உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான PayPal, நேற்று புதன்கிழமை, “PayPal World” எனும் உலகளாவிய பண பரிமாற்ற தளத்தை அறிமுகம் செய்தது. […]