இந்திய தூதரகம் எச்சரிக்கையாக இருக்கவும், தூதரகத்தின் சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தலில் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக பல இந்திய குடிமக்கள் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கிடையில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இந்திய மக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் […]

அமெரிக்க ராணுவத்தின் 250வது ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஆங்கில நாளிதழான தி இந்துவில் வெளியான செய்தியின்படி, அந்தச் செய்தி தவறானது என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். “250வது நிறுவன தின ராணுவ அணிவகுப்புக்கு எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவரும் அழைக்கப்படவில்லை” என்று அவர் கூறினார். ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் விழாவில் […]

இஸ்ரேஸ் தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் […]

நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் மத்திய பெனு மாநிலத்தின் யெலேவாடா என்ற கிராமத்தில் திடீரென நுழைந்த துப்பாக்கித்தாரிகள் அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். வெள்ளிக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போனதாகவும், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், அம்னஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா தெரிவித்துள்ளது . பல […]

ஈரான்-இஸ்ரேல் போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் 02 F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேலிய பெண் விமானியை சிறைபிடித்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் கூட கூறியுள்ளன. இந்த அறிக்கைகளை இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்திருக்கலாம், ஆனால் சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் போரைப் போலவே, மத்திய கிழக்கில் தகவல் (பிரச்சார) போர் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​பாகிஸ்தான் இராணுவம் ஆறு […]

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து […]

விமான நிலையங்களும் அவற்றின் ஓடுபாதைகளும் உலகில் மிகவும் சிந்தனையுடன் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் சில விமான நிலையங்களும் அவற்றின் ஓடுபாதைகளும் மிகவும் ஆபத்தானவை. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். 2 நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து அனைவரையும் உலுக்கியுள்ளது. அதன் வீடியோ வெளியானதும், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வரிசையில், இன்று உலகின் சில ஆபத்தான விமான நிலையங்களைப் பற்றி பார்க்கலாம். அங்கு விமானம் தரையிறங்கும் போதும் அல்லது புறப்படும் […]