வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் கடற்படை தளபதி ரம்ஸி ரமலான் அப்துல் அலி சலே கொல்லப்பட்டார். இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. சமரச முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல், மறுபக்கம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய […]

வானிலை மையம் (NOAA) மற்றும் தேசிய வானிலை சேவை துறையில், பணியாளர் குறைபாடு காரணமாக டெக்சாஸ் வெள்ளத்திற்கான எச்சரிக்கை சரியாக அளிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன அமெரிக்காவின் டெக்சாஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இடி-மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. குறிப்பாக குவாடாலூப் ஆறு கரை புரண்டதில், வெள்ளம் நகரின் உள்ளே புகுந்தது. […]

டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடவுள்ளார். அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு […]

இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. தற்போது UPI அதாவது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், UPI ஐ ஏற்றுக்கொண்ட முதல் கரீபியன் நாடாக அவர்கள் மாறியுள்ளனர். அதாவது இனிமேல், இங்குள்ள எந்தவொரு பொருளின் பரிவர்த்தனைக்கும் UPI மூலம் பணம் செலுத்தலாம். பீம் ஆப் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் […]

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6, 2025) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது ஒரு இலட்சியம் மட்டுமல்ல, அது நமது பொதுவான நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளம் என்று பிரதமர் மோடி கூறினார். “மனிதகுலத்தின் வளர்ச்சி அமைதியான மற்றும் […]

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் உடட 51 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். இதனையடுத்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் […]

மத்திய காலத்திலிருந்து மறுமலர்ச்சி காலம் வரை, போர் மற்றும் மோதல்கள் தொடர்ச்சியான நிகழ்வாக இருந்து வருகின்றன. சமீபத்தில், இஸ்ரேல் மற்றும் காசா, ரஷ்யா மற்றும் உக்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை உலகம் கண்டுள்ளது, மேலும் சீனா மற்றும் தைவானுடனான பதட்டங்கள் கூட பிடிவாதமாக நீடிக்கின்றன. இத்தகைய போர்களும் மோதல்களும் பரவலான அழிவை உருவாக்குகின்றன. அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன, மக்கள் தங்கள் வீடுகளை […]

அதிபர் டிரம்பின் வரி கொள்கை சட்டத்தை விமர்சித்து வந்த எலான் மஸ்க், ‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார். […]

ரஷ்யாவின் சில பகுதிகளில், பள்ளி மாணவியர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைய துவங்கி உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனாவே தற்போது பின்தங்கிவிட்டது.சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு […]