புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் பலருக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளும், அதே நேரத்தில் பயங்களும் உள்ளன. சிலர் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்; இன்னும் சிலர் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுமோ என்ற கவலையில் உள்ளனர். இப்படியான சூழலில், பிரபல பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ரடாமஸ் (Nostradamus) 2026 ஆண்டைப் பற்றி கணித்ததாக சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள், சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. அவை உண்மையாகி விடுமோ என்ற அச்சமும், அதே சமயம் ஆவலும் […]

தோஷகானா–2 ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. இந்த தீர்ப்பு, ராவல்பிண்டி ஆதியாலா சிறையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து கிடைத்த அரிய, உயர்மதிப்புள்ள பரிசுப் பொருட்களை அரசு விதிமுறைகளை மீறி, குறைந்த விலையில் வாங்கி பின்னர் விற்று அரசுக்கு நஷ்டம் […]

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் மய்மன்சிங் (Mymensingh) பகுதியில் ஒரு இந்துத் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ […]

கனமழையின் போது புர்ஜ் கலீஃபாவை மின்னல் தாக்கும் காட்சிகள் அடங்கி ஒரு அற்புதமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். வைரலான வீடியோ இந்த வீடியோவில், கனமழை மற்றும் புயல் சூழலில் உலகின் மிக உயரமான கட்டிடமான […]

கடந்த 2020-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை யாராலும் மறக்க முடியாது. அந்த வடுக்கள் மறைவதற்குள், ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) எனப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், மனிதர்களிடையே அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, எதிர்காலப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. […]