பூமியில் பல இயற்கை அதிசயங்கள் உள்ளன. நீங்கள் அத்தகைய அதிசயங்களைக் காண விரும்பினால், இந்தோனேசியா ஒரு விருப்பமான இடமாகும். ஆயிரக்கணக்கான தீவுகளில் பரவியுள்ள வெப்பமண்டல கடற்கரைகள், பழங்கால கோவில்கள், மழைக்காடுகள், வனவிலங்குகள் மற்றும் செயல்படும் எரிமலைகள் ஆகியவற்றுக்கு இந்த நாடு தாயகமாக உள்ளது. இந்த இயற்கை அதிசயங்களில், காவா இஜென் என்பது அழகும் ஆபத்தும் சங்கமிக்கும் ஒரு இடமாகும். கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு எரிமலை குழிக் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் 800-க்கும் மேற்பட்டோருக்கு திட்டமிடப்பட்டிருந்த தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்த நாட்டின் ஆட்சியை எதிர்பாராத விதமாக பாராட்டியுள்ளார். டிரம்பின் இந்த கருத்து, நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் தற்போது தணிந்துவரும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த […]

உலக நாடுகளின் பயணச் சுதந்திரத்தையும், அந்தந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையையும் அளவிடும் ‘ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு’ (Henley Passport Index) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் ராஜதந்திர உறவுகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாடுகளுடனான நற்பெயர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலில், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் […]

2024-ஆம் ஆண்டு ராணுவ சட்டத்தை அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல், 2024 டிசம்பரில் ராணுவ சட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியது. ராணுவ சட்டம் […]

உலகிலேயே அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் வாழும் நாடாக அறியப்படும் ஜப்பானில், நூறு வயதை கடந்த முதியவர்களின் எண்ணிக்கை கடந்த 2025 செப்டம்பர் நிலவரப்படி 99,763 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 55 ஆண்டுகளாக தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் இந்தப் பட்டியலில், 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜப்பானியர்களின் இந்த நீண்ட ஆயுள் என்பது வெறும் தற்செயலானது அல்ல. அது அவர்களின் பாரம்பரிய […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி, நாடு தழுவிய போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணைகளும் மரண தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்று ஈரானின் நீதித்துறைத் தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார். ஈரானில் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளன.. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறி உள்ளன.. இந்த போராட்டங்களில் இதுவரை 12 குழந்தைகள் உட்பட 2500 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த […]

சீனாவில் ஒரு செயலி பிரபலமாகி வருகிறது. கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கும் இந்த செயலியின் பெயர் “நீங்கள் இறந்துவிட்டீர்களா?” (Are You Dead?) என்பது தான்..இதன் செயல்பாடு மிகவும் எளிமையானது. இந்த செயலியைப் பயன்படுத்தும் நபர், ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு பட்டனை அழுத்தி தான் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட அவசரத் தொடர்பு எண்ணுக்கு ஒரு எச்சரிக்கை அனுப்பப்படும். இந்த செயலி எப்படி […]

ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்களுக்கு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. தற்போது ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வணிக விமானங்கள் உட்படக் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள அனைத்து […]

திபெத்தில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் “நிலநடுக்கம், அளவு: 4.3, தேதி: 14/01/2026 12:27:41 IST, அட்சரேகை: 27.96 வடக்கு, தீர்க்கரேகை: 87.87 கிழக்கு, ஆழம்: 90 கி.மீ, இடம்: திபெத்” என்று நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை ஃபோர்ட் கார் தொழிற்சாலையை பார்வையிட்டபோது, அங்கிருந்த ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, டிரம்ப் அந்த நபரிடம் அநாகரிக சைகை (middle finger) காட்டியதும், கோபமாக கத்தி திட்டியதும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை TMZ வெளியிட்டது. வெளியான உடனேயே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் என்ன இருக்கிறது? வீடியோவில், டிரம்ப் முதலில் […]