“கொஞ்சிக் கொஞ்சிப் பேசவா”? கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவரிடம் காவல்துறை ஆபாச பேச்சு!

கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார்டு செயலாளராகவும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராகவும் இருந்து வந்தவர் சதீஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுகவைச் சார்ந்த முன்னாள் வார்டு செயலாளர் எஸ்தர் என்ற பெண் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.


இந்தப் பெண்மணியும் சோமங்கலம் காவல் நிலையத்தில் உளவுத்துறை காவல் அதிகாரியாக பணியாற்றும் மாதவன் என்பவரும் செல்போனில் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்திருக்கின்றனர். இவர்கள் ஆபாசமாக பேசும் ஆடியோ லீக் ஆகி காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணுடன் உளவுப் பிரிவு பிரிவு போலீஸ் அதிகாரி எதற்காக பேச வேண்டும் ஒருவேளை அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் காவல் அதிகாரி ஒருவரே இவ்வாறு ஆபாசமாக பேசியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

'சீனியர்' மாணவர் தொடர் தொல்லை மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!

Thu Feb 23 , 2023
ஹைதராபாத்தைச் சார்ந்த முதுகலை மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி செய்த வழக்கில் அவரது கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கக்காட்டியா மருத்துவக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருபவர் தாராவதி ப்ரீத்தி. இந்த மாணவிக்கு அவருடன் பணிபுரியும் மூத்த மருத்துவர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவருமான டாக்டர் சைப் என்பவர் பணி ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்திருக்கிறார். இதன் காரணமாக மனமுடைந்த […]
IMG 20230223 WA0080

You May Like