உஷார்…! இடிமின்னலுடன் மழை பெய்யும்…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பயங்கரம்...! சாலை விபத்தில் சிக்கிய அமைச்சர் வாகனம்...! 7 பேர் படுகாயம்... 5 பேருக்கு தீவிர சிகிச்சை...!

Sat Feb 4 , 2023
மேற்கு வங்க அமைச்சர் சென்ற வாகனம் சாலை விபத்தில் சிக்கியது. மேற்கு வங்க அமைச்சர் பாபுல் சுப்ரியோ சென்ற வாகனம் சாலை விபத்தில் சிக்கியது. பிர்பூமின் ராம்பூர்ஹாட் மாவட்டத்தில் சுப்ரியோவின் கான்வாய் வேகமாக வந்த ஆட்டோ மீது மோதியதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்தனர். ராம்பூர்ஹத் திருவிழாவில் கலந்து கொள்ள தனி காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார். வாகனத் தொடரணியில் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற […]
1149144 whatsapp image 2023 02 03 at 11.25.53 pm

You May Like