மஞ்சள் அலர்ட்…! அடுத்த 1 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் நெல்லை, குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு. இந்த மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15, 16-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌

Vignesh

Next Post

ஷாக்!… ஆவின்பால் உற்பத்தி குறைவு!… தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்!

Fri Apr 12 , 2024
Avin: தமிழகத்தில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் தினசரி சராசரி பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. ஆவின் பால் கொள்முதல் தினசரி சராசரி மூன்று லட்சம் லிட்டர் வரை […]

You May Like